states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 1,000-ஐத் தாண்டியது

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி யாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. ஜேஎன்.1 மாறு பாடு (ஓமிக்ரானின் துணை திரிபு) நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோ னா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது. திங்களன்று காலை 8 மணி அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் தற்போது 1,009  பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கு தொற்று உறுதியாகியுள் ளது. மகாராஷ்டிராவில் 209 பேரும், தில்லி யில் 104 பேரும், குஜராத்தில் 83 பேரும், தமிழ்நாட்டில் 69 பேரும், கர்நாடகத்தில் 47 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 15 பேரும், ராஜஸ்தானில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஹரியானா, புதுச்சேரியில் தலா 9, ஆந்திராவில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், கோவா, தெலுங்கானாவில் தலா ஒருவரும் என மொத்தம் 1,009 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் பலி அதே போல நாடு முழுவதும் கொரோனா தொற்றிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், கர்நாட கத்தில் ஒருவர். கொரோனா பாதிப்பால் 7 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு படித்து வந்த  ஜம்மு-காஷ்மீர் மாணவி தற்கொலை

நாட்டின் பயிற்சி மையங்களின் பூங்காவாக இருப்பது ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம் ஆகும். இந்த நகரத்தில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் மாநில அளவிலான பயிற்சி மையங்கள் உள்ளன. அதே போல தங்குமிட வசதியும் இருப்பதால், நாடு முழுவதில் இருந்தும் கோட்டா நக ரத்திற்கு நீட் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சிக்கு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஜீஷான் என்ற 18 வயது நீட் தேர்வெழுதிய மாணவி கோட்டாவில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என திங்கள்கிழமை மகாவீர் நகர் காவல் ஆய்  வாளர் ரமேஷ் காவியா தெரிவித்துள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை மாலை தற் கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜீஷான் தனது உறவினரிடம் தொலை பேசியில் பேசி தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறி யுள்ளார். அப்போது உறவினர்கள் சமா தானப்படுத்தியுள்ளனர். எனினும் ஞாயி றன்று இரவு ஜீஷான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டார். இந்த ஆண்டில் இது 15ஆவது தற் கொலைச் சம்பவம் (கோட்டா மட்டும்) ஆகும். இது இந்த மாதத்தில் கோட்டா வில் இரண்டாவது சம்பவமாகும். (எந்தவொரு பிரச்சனைக்கும் தற் கொலை தீர்வல்ல : மனநல ஆலோசனை க்கு 104, 14416 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.)