states

img

பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டதற்காக ராஜஸ்தான் பல்கலை.மாணவர்கள் இடைநீக்கம்

ஜெய்ப்பூர், ஜன.31- பிரதமர் நரேந்திர மோடி, 2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த பொழுது நிகழ்ந்த கோத்ரா கலவர  சம்பவங்களின் உண்மை நிலவரங் களை அறிக்கை ஆதாரத்துடன் “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் 2 பாகங்களைக் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி நிறு வனம் கடந்த வாரம் வெளியிட்டது.  இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய  பாஜக அரசு தடை விதித்துள்ள நிலை யில்,  ராஜஸ்தான் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆவணப்படத்தை திரை யிட்டதற்காக 11 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவத் திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு கண்டனம் தெரி வித்ததோடு, மாணவர்களின் இடை நீக்கத்தை உடனடியாக திரும்பப் பெறு மாறு ராஜஸ்தான் மத்திய பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மாண வர் சங்க பொதுச் செயலாளர் மயூக்  பிஸ்வாஸ் மற்றும் தலைவர் வி.பி.சானு  வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2002 குஜராத் படுகொலையில் ஆயிரக் கணக்கான  முஸ்லீம் சமூகத்தினரையும் கொன்று,

லட்சக்கணக்கான முஸ்லீம்  சமூகத்தினரை வீடற்றவர்களாக்கி யதில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசு முக்கியப் பங்கு கொண்டிருப்பதாக அறிக்கை ஆதாரத்துடன் “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் 2 பாகங்களைக் கொண்ட பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டது. தற்போதைய, சகிப்புத்தன்மையற்ற மோடி அரசு இந்த ஆவணப்படத்தை தடை செய்ய முயல்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இந்த ஆவணப்பட “தணிக்கையை” இந்திய மாணவர் சங்க அமைப்பு  ஒருபோதும் ஏற்காது. ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது; இதே காரணத்திற்காக ஜாமியா மிலியா, ஜேஎன்யு ஆகிய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல் என தொடர்ச்சியாக பல்வேறு  சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அரசு அதிகாரத்தையும், ஏபிவிபியை யும் பயன்படுத்தி சங்பரிவாரம் இணைந்து மாணவர்கள் மீதும், பிற  எதிர்ப்புக் குரல்கள் மீதும் தாக்குதல் களை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஆவணப்படம் திரையிட விதிக்கப் பட்டுள்ள தடைகளை அரசும், பல்கலைக் கழக நிர்வாகங்களும் உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது.                 (ஐஎன்என்)