states

ராகுல் வீட்டில் போலீஸ்

புதுதில்லி,மார்ச் 19- காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கடந்த ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை  மேற்கொண்டார்.  இதில் ஜனவரி 30 அன்று ராகுல் காந்தி செய்தியாளர்களி டம் பேசுகையில், “நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாவது அதிகரித்து காணப்படுகிறது. ஊடகங்கள் இதனை பற்றி பேசுவதே இல்லை. பெண்கள் சிலர் தன்னை சந்தித்தபோது, அவர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி என்னிடம் கூறினர். அவர்களிடம், போலீ சாரிடம் சென்று புகார் கொடுக்கும்படி கூறினேன். எனினும், திரு மணம் நடைபெறாமல் போய் விடும் என்பதற்காக யோசிக்கிறோம் என அவர்கள் கூறினர்” என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் மோடி குறித்த ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் மோடி அரசு, இந்த பேட்டியை சாக்காக வைத்துக்  கொண்டு அவரது வீட்டிற்கு போலீசாரை அனுப்பியுள்ளது.

தில்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டிற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையாளர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான தில்லி போலீசார் மார்ச் 19 ஞாயிறன்று வந்துள்ளனர். இதுகுறித்து  சாகர் பிரீத் ஹூடா கூறுகையில், பாதயாத்திரையின்போது, பாலியல் பலாத்காரம் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்தது பற்றி ராகுல் காந்தி பேசினார். இதனை தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அவரை அணுகிய பெண் களை பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக அவரிடம் பேச இருக்கிறோம். இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படும் என்று கூறிக்கொண்டார்.   தில்லி போலீசார் வந்த தகவலை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே திரண்டனர். தில்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர் களை போலீசார் கைது செய்தனர்.   ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதானி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பி வரும் கேள்விகள் பிரதமர் மோடியை எந்த அளவு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதையே இந்த நாடகம் உணர்த்துவதாக காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.