states

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்!

புதுதில்லி, ஏப்.6- குஜராத் மாநிலம் வதோ தரா, மகாராஷ்டிர மாநிலம் சத்தி ரபதி சம்பாஜி நகர், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, ஹூக்ளி,  உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம்  சசாராம் ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடை பெற்ற சங்-பரிவார அமைப்பு  கள் ‘ராம நவமி’ கொண்டாட் டம் என்ற பெயரில் ஊர்வலங் களை நடத்தினர். இஸ்லாமியர்களின் வழி பாட்டுத் தலங்கள், குடியிருப்பு கள் இருக்கும் பகுதிகளை தேர்ந்  தெடுத்து, இந்த ஊர்வலங்கள் மூலம் ஆத்திரமூட்டல் நட வடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கல் வீச்சு, வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு என சம்பவங்கள் அரங்கே றின. ஒருவர் படுகொலை செய்  யப்பட்டார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். 77 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போதும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியா வில், ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நடத்திய ‘ராம நவமி’ ஊர்வ லங்களின் போது, பல்வேறு  மாநிலங்களிலும் முஸ்லிம்  சமூகம் குறிவைக்கப்பட்ட தற்கு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of  Islamic Cooperation - OIC)  செயலகம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: “ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநி லங்களில் ‘முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து வன்முறை மற்றும் காழ்ப்புணர்வு’ அரங்கேறியுள் ளது.

குறிப்பாக பீகாரில் உள்ள  மதரசா மற்றும் நூலகம் கடந்த  மார்ச் 31 அன்று எரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்  ளது. இதுபோன்ற ‘ஆத்திரமூட்  டும் வன்முறை மற்றும் காழ்ப்பு ணர்வின் செயல்களை நாங்கள்  வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இவற்றை அதிகரித்து வரும் ‘இஸ்லாமிய வெறுப்பு’ மற்றும் இந்தியாவில் முஸ்லீம் சமூகத்தின் மீது அமைப்புரீதி யாக இலக்கு வைப்பதன் தெளி வான வெளிப்பாடாக பார்க்கி றோம். இதுபோன்ற செயல்க ளைத் தூண்டுபவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக உறு தியான நடவடிக்கை எடுக்கவும்,  நாட்டில் உள்ள முஸ்லிம் சமூ கத்தின் பாதுகாப்பு, உரிமைகள்  மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஐஓசி வெளி யிட்ட அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்  தித் தொடர்பாளர் அரிந்தம்  பாக்சி கண்டனம் தெரிவித்துள்  ளார். “இந்தியா தொடர்பாக ஐஓசி செயலகம் வெளியிட்ட  அறிக்கையை நாங்கள் வன்மை யாகக் கண்டிக்கிறோம். இது அவர்களின் வகுப்புவாத மனப்  பான்மை மற்றும் இந்தியா வுக்கு எதிரான செயல்திட்டத் திற்கு மேலும் ஒரு உதாரணம். இந்திய விரோத சக்திகளால்  தொடர்ந்து கையாளப்படுவதன் மூலம் இஸ்லாமிய ஒத்து ழைப்பு அமைப்பு (OIC) அதன்  நற்பெயருக்கு சேதத்தை ஏற்  படுத்துகிறது” என்று கூறியுள் ளார்.