புதுதில்லி,மார்ச் 14- முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ளார். முதலாவதாக, பங்குச் சந்தை பற்றிய ரகசியத் தகவல்கள் இமயமலைச் சாமியார் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்றும் தேசிய பங்குச் சந்தை குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததிலும் முறைகேடு கள் நடந்துள்ளதாக செபி தெரிவித்தது. இதை யடுத்து சித்ரா ராமகிருஷ்ணா விசாரணை வளையத்தில் சிக்கினார். அவரிடம் சிபிஐ தனது விசாரணையை நடத்திவருகிறது. இந்நிலையில் தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.