states

37 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,அக்.29- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717, IND-TN-10-MM-917 மற்றும் IND-TN-10-MM-972 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடி  படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலை யில், 28-10-2023 அன்று இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள னர். இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள னர். இவ்வாறான தொடர்ச்சியான கைது கள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழகத்தின் மீனவ  சமுதாயத்தினர் இடையே மன அழுத்தத்தை யும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி யுள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக் கடற் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு கள் விடுவிக்கப்பட வேண்டும். இதுதொடர் பாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப் பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடை யின்றி தொடர்வது வேதனையளிக்கிறது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலை யான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில்  மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறேன். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.