எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி
இனக் கலவரத்திற்கு முதல்வர் பைரேன் சிங் அரசே காரணம்
புதுதில்லி, ஜுன் 20 - இனக் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரில் அமைதி நிலவ, உடனடியாக இக்கலவரத்திற்கு காரணமான மாநில பாஜக அரசு பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். பெரும்பான்மை இனவெறியால் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய் இன மக்களுக்கு பைரேன் சிங் தலைமை யிலான பாஜக அரசு பழங்குடி அந்தஸ்து வழங்கியது. அதைத் தொடர்ந்து மே 3 அன்று துவங்கிய வன்முறை 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. வன்முறையால் மாநிலத்தின் இயல்பு நிலை முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுப் படுத்த 11 மாவட்டங்களில் 144 தடை உத்த ரவு, இணையதள முடக்கம் மற்றும் சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தி இருந்தாலும் பாஜக அரசால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.இந்த வன்முறை யில் இதுவரை 150 நபர்கள் கொல்லப் பட்டுள்ளனர்; 1000க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்; 5000க்கும் மேற்பட்ட வீடுகள் கலவரத்தில் எரிக்கப் பட்டுள்ளன. 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நூறுக்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு அமைதி யை ஏற்படுத்த ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அனைத்து தரப்பு மக்களுட னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனினும், அதற்கு செவி சாய்த்திட மோடி அரசு தயாராக இல்லை. இத்தகைய பின்னணியில் மணிப்பூரைச் சேர்ந்த பத்து கட்சிகளின் தலைவர்கள், மணிப்பூர் முன்னாள் முத லமைச்சர் இபோபி சிங் தலைமை யில் ஜுன் 19 (திங்களன்று) தலைநகர் புதுதில்லிவந்தனர். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நேரடி யாக ஆலோசனை நடத்தி மனு அளித்திட வந்திருந்த அவர்களுக்கு, பிரதமரு டனான சந்திப்புக்கு அனுமதி கிடைக்க வில்லை. மணிப்பூர் எதிர்க்கட்சிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதிகேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் இபோபி சிங் தலைமையில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கைசெம் மெகா சந்திர சிங், ஐக்கிய ஜனதா தள மணிப்பூர் மாநிலத் தலை வர் பைரேன் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லைஸ்ராம் சொதின்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிப்பூர் மாநிலச் செயலாளர் சேத்ரிமயூம் சாந்த்தா, திரிணாமுல் காங்கிரஸ் ஒருங்கிணைப்பா ளர் தொக்சோம் இனோச்சா சிங், ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளர் திங்னம் பிஸ்வநாத் சிங், பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர் ஞானேஸ்வர் சிங், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலை வர் சோரம் இபோஎமாசிங், சிவசேனா (உத்தவ்தாக்கரே) மாநிலத் தலைவர் தேவனாந்த சிங், புரட்சிகர சோச லிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மனோ ரஞ்சன் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி.பவனுக்கு வருகை தந்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், நிலோத்பல் பாசு ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தினர்.
சீத்தாராம் யெச்சூரி பேட்டி
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, மணிப்பூரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டும் அதற்கு பிரதமர் அலுவலகத்திட மிருந்து எந்த பதிலும் வராதது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார். மணிப்பூரில் ஆளும் பாஜகவின் இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் - குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் - குக்கி களுக்கு என்று தனியாக மாநில நிர்வாகத்தை உருவாக்க வேண்டு மென்று பேசுகிறார்கள்; அதேவேளை யில் அங்கு சென்று வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் ஒருங்கிணைந்த மாநிலமாக நீடிக்கும் என்று சொல்கிறார். மாநில பாஜக அரசு ஒருவிதமாகவும் மத்திய பாஜக அரசு ஒரு விதமாகவும் பேசி மணிப்பூர் மக்களை குழப்புவதோடு மட்டுமல்ல, கலவரத்தை மேலும் மேலும் தூண்டும் வேலையை செய்து வருகின்றன. இதுதான் பாஜக வின் இரட்டை எஞ்சின் ஆட்சி. இரண்டு எஞ்சின்களும் முரண்பட்ட திசையில் செல்கின்றன எனவும் சீத்தாராம் யெச்சூரி சாடினார். மேலும் அவர் கூறியதாவது: மணிப்பூரில் தற்போதைய நிலை மைக்கு முழுக்க முழுக்க மாநிலத்தை ஆளும் பாஜகவும் அதன் முதல்வருமே அடிப்படைக் காரணம். எனவே மாநில பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து சமூகப் பிரிவு மக்களையும் அழைத்து, நம்பிக்கையூட்டி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.
அங்கு தற்போதைய பாஜக மாநில அரசால் நிச்சயம் இயல்பு நிலையைக் கொண்டுவர முடியாது. எனவே தற்போதைய அரசு அங்கு நீடிப்பது பொருத்தமில்லாதது. எனவே அந்த அரசு உடனடியாக வெளியேறுவதுதான் சரியானது. இதைத்தொடர்ந்து உடனடி யாக அனைத்து அரசியல் கட்சிகளை யும் அழைத்து ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மணிப்பூரில் உடனடியாக இயல்பு நிலையை உருவாக்குவதும் அமைதி யை ஏற்படுத்துவதும்தான் ஒன்றிய அரசின் முதல் பெரும் கடமையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எமது கட்சி துணைநிற்கும். பாஜக அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தவறுகளால் அங்கு இனக்கலவரம் தீவிரமான இடத்திற்கு சென்றுள்ளது. இனரீதியாக மக்கள் தனித்தனியே அணிதிரண்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள். இது மாநி லத்தின் ஒற்றுமைக்கும் நாட்டின் ஒற்று மைக்கும் பெரும் ஆபத்து ஆகும். எனவே வன்முறையை கைவிட்டு மணிப்பூரின் அனைத்து சமூக மக்களும் உடனடியாக அமைதிக்கு திரும்ப வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.
முதலமைச்சர் பைரோன் சிங் அரசு உடனடியாக வெளியேற வேண்டும் என மீண்டும் வற்புறுத்துகிறோம். அங்கிருந்து, அமைதியை ஏற்படுத்த தலையிடுங்கள் என்ற கோரிக்கையுடன் முன்னாள் முதலமைச்சர் இபோபி சிங் தலைமையில் வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் குழுவை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். அவரது வெளி நாட்டுப் பயணத்தைக் காரணம் காட்டி யிருக்கிறார்கள். மணிப்பூர் நிலை மையின் தீவிரத்தைக் கருதி, பிரதமர் இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அவரை சந்திப்பதற்காக மணிப்பூர் தலைவர்கள் பல நாட்களாக தில்லியில் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இபோபி சிங் வேண்டுகோள்
இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் இபோபி சிங், பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கு மென நம்புகிறோம். உடனடியாக அமைதி திரும்புவதற்கு ஒன்றிய அரசு தலையிட்டு முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும், அனைத்து சமூகங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.