states

img

ரூ. 2.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, ரயில்வேயை நவீனப்படுத்தி தனியாருக்கு விற்கும் ஏற்பாடா?

ராய்ப்பூர், பிப். 4 - ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 2.35 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பது, தனியாருக்கு விற்கும் முன் ரயில்வேயை நவீனப் படுத்துவதற்காகவா? என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.  ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது ரயில்வே-க்கு 2013-14 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு அதிகம் என்று நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.  மேலும், ஒன்றிய அரசின் பட்ஜெட் ஆவணங்களின்படி, 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் ரயில்வேயின் நிகர வரு வாய் செலவினம் ரூ. 2.65 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 2022-23 திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரயில்வே யின் நிகர வருவாய் செலவினம் ரூ. 2.42 லட்சம் கோடி என்ற நிலையில், வரு மாண்டுகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிய பெட்டிகள் தயா ரித்தல், தண்டவாளங்களை புதுப்பித் தல் மற்றும் ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் பயன்படும் என்று செய்திகள் வெளி யாகின. இந்நிலையில்தான், ரயில்வே துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து, சத்தீஸ் கர் முதல்வர் பூபேஷ் பாகேல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.  “ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு சுமார் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஊழியர்க ளுக்காகவா அல்லது புதிய ஆட் சேர்ப்புக்காகவா அல்லது தனியார் நிறு வனங்களுக்கு விற்கும் முன் ரயில் வேயை நவீனப்படுத்துவதற்காகவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.