states

பஞ்சாப் அரசை கவிழ்க்க பாஜக சதி?

சண்டிகர் சமீபத்தில் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் கள மிறங்கிய ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாகி உள்ளது. இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தியது மற்றும் சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றது ஆகிய வற்றை சாதகமாகப்பயன்படுத்தி, பஞ்சாப்பில் குதிரை பேரம் மூலமாக ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. மேயர் தேர்தல் மூலமாக... சமீபத்தில் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கின. மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கூட்டணி மாறி வாக்களிக்க, சண்டிகர் மேயர் பொறுப்பு கடைசி நேரத்தில் பாஜக கைக்குச் சென்றுவிட்டது.  சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் மூலமாகவே ஆம் ஆத்மி கவுன்சிலர்களை பாஜக விலைக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதே பார்முலாவை வைத்து தற்போது பஞ்சாப்பிலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் 30 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜக வளையத்தில் இருப்ப தாகவும் கூறப்படுகிறது. தில்லி தேர்தலில் தோல்வியடைந்துள்ளதால் ஆம் ஆத்மி கட்சி யின் நிலைமை இனி அவ்வளவு தான் என்ற கூற்றை பயன்படுத்தி பாஜக குதிரை பேர வேலையை துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப்பில்  போட்டியிடும் கெஜ்ரிவால்? ஆட்சி கவிழ்ப்பு தகவல் வெளியான பின்பு தான் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால் தில்லியில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக் களின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி, ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் பஞ்சாப்பில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்றத் தொகுதியில் கெஜ்ரி வால் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளி யாகியுள்ளது.