states

img

நீட் முறைகேடு : பாஜக ஆளும் மாநில அரசுகளை காப்பாற்ற சிபிஐ தீவிரம்

நடப்பாண்டின் இளங்நிலை மருத்து வப் படிப்பிற்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், இந்த விவ காரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.  நீட் முறைகேடு சம்பவங்கள் அனைத்தும் பாஜக ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் அரங்கேறியதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக இதுவரை 36 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில், இந்த நீட் முறைகேடு விவகாரத்தில்  பாஜக ஆளும் மாநில அரசுகளை காப் பாற்ற சிபிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்ட அறிக்கையில்,”ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் அமைந்துள்ள ஒயாசிஸ் பள்ளியில் கடந்த மே 5 அன்று காலை  நீட் வினாத்தாள் கசிந்தது. பங்கஜ் குமார் என்பவர் சாஹில் என்பவருக்கு வினாத் தாளை கொடுத்துள்ளார். ஒயாசிஸ் பள்ளி யின் முதல்வர், பள்ளியின் மையக் கண் காணிப்பாளர், துணை முதல்வர் ஆகி யோர் உடந்தையாக இருந்தனர். அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி, நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்து வினாத்தாள்களை திருடியுள்ளனர். திருடப்பட்ட வினாத் தாள், அதே நாளில் ஹசாரிபாக்கை சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.  சிபிஐ அறிக்கை உணர்த்துவது யாதெனில் பாஜக ஆளும் மாநிலங் களில் நீட் முறைகேடு அரங்கேறவில்லை என்றும், காங்கிரஸ் கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு நீட் வினாத்தாள் சென்றுள்ளது என்றும் கூறும் வகையில் அறிக்கை அமைந்துள்ளது.