18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்ற நிலையில், மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 543 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், வேட்பாளர் செலவு கணக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அதில்,”மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 950 வேட்பாளர்கள் தங்க ளது செலவு கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்தது. ஜூலை 11க்குள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேட்பாளர் செலவு கணக்கை அனுப்பி வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.