பாலியல் துன்புறுத்தல் புகார்களில் நியாயமான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராடி வரும் மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவை வழங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். அவருடன் ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள் ஆஷா சர்மா, மைமூனா முல்லா மற்றும் சிபிஐ(எம்) தில்லி மாநிலச் செயலாளர் ராஜீவ் குன்வார் ஆகியோர் போராட்டக்களத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.