சிபு சோரனின் உடல்நிலை தொடர்பான தகவல்களை கேட்டறிந்த பிருந்தா காரத்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சிபு சோரன் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி கங்காரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூரண நலம் பெறவும், நல்ல உடல் நலம் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், மூத்த தலைவர் பிருந்தா காரத் சனிக்கிழமை அன்று கங்காரம் மருத்துவமனைக்குச் சென்றார். ஷிபு சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மற்றும் கல்பனா சோரன் (எம்எல்ஏ) மற்றும் அவரது இளைய மகன் பசந்த் சோரன் (எம்எல்ஏ) ஆகியோரை சந்தித்து ஷிபு சோரனின் உடல்நிலை தொடர்பான தகவல்களை பிருந்தா காரத் கேட்டறிந்தார்.