states

கடற்படைக்கு ரூ.1700 கோடி செலவில் வாங்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள்!

புதுதில்லி, செப்.24- கடற்படைக்கு ரூ.1,700 கோடி செலவில்  35 பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள் முதல் செய்வதற்கு முடிவு செய்துள்ள நரேந்திர மோடி அரசு, இதற்காக ‘பிரம் மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறு வனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படை களையும் நவீனமயப்படுத்துகிறோம், கூடு தல் ஆயுதங்களை கொள்முதல் செய்கி றோம் என்று பாதுகாப்புத்துறை காண்ட்  ராக்டுகளை தனியாருக்கு வழங்கும் வேலைகளில் மோடி அரசு இறங்கி யுள்ளது. இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து நேரடியாகவும் நவீன ஆயுதங்களை வாங்க  முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து  வாங்கப்படும் ‘எஸ்-400’ போன்ற ஏவு கணை தடுப்பு சாதனங்களும் இதில் அடங்  கும். இந்நிலையில், நீரிலும், நிலத்திலும் எதிரிகளின் தாக்குதலை முறியடிப்ப தற்காக, இரட்டை பயன்பாட்டு திறன் கொண்ட 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணை களை கடற்படைக்கு வாங்க முடிவு செய்தி ருக்கும் மோடி அரசு, இதற்காக, ‘பிரம் மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறு வனத்துடன் ரூ.1,700 கோடிக்கான ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய - ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் இந்த பிரம்மோஸ் ஏவு கணைகள், சூப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் திறனும் கொண்டது. இந்திய ராணுவத் தின் முப்படைகளிலும் இந்த ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

;