புதுதில்லி, மார்ச் 20 - அதானியின் ஊழல் விவகாரத்தைத் திசைத்திருப்பும் வகையில், ஆளும் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி.க்களின் ரகளை காரணமாக, திங்க ளன்று 6-ஆவது நாளாகவும் நாடாளு மன்ற நடவடிக்கைகள் முழுமை யாக முடங்கின. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டன. திங்களன்று (மார்ச் 20) காலை 11 மணிக்கு, மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது, அதானி ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக உரையில், இந்திய நாட்டை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசிவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வழக்கம்போல பாஜக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவையில், கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து, “நான் அவையை நடத்த வேண்டும் என்று விரும்பி னால் நான் அவையை நடத்து கிறேன். இல்லையென்றால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப் படும்’’ என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். எனினும் அமளி தொட ரவே, மக்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்தார். பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சித் தலைவர் களை தனது அறைக்கு வர வழைத்து, நாடாளுமன்ற முடக்கத் திற்கு தீர்வுகாணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதேபோல மாநிலங்களவை யில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட, விதி 267-இன் கீழ் மொத்தம் 14 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று (இதில் 9 நோட்டீஸ்கள் காங்கிரஸ் அளித்தது) கோரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால், அனைத்து நோட்டீஸ்களும் நிராகரிக்கப் படுவதாக அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதனால் மாநிலங்களவையிலும் அமளி, அங்கும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு நாடாளு மன்றம் கூடியபோது, மீண்டும் கூச்சல், குழப்பம், அமளி நிலவிய தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.