states

பணமதிப்பு நீக்கத் துயரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்பது எப்போது?

புதுதில்லி, நவ.8- பணமதிப்பு நீக்கத் துயரத்தின் 6 ஆண்டு கள் நிறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலை வர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி யுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம்  தேதி பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு  நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். இரவில் திடீரென டி.வி.யில் தோன்றி பழைய  500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று அறிவித்தார். நாட்டையே நிலை குலையச் செய்வதாக இந்த நடவடிக்கை  இருந்தது. செல்லாது என்று அறிவிக்கப் பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளிடம் கொடுத்து புதிய 1,000 மற்றும் 2,000 ரூபாய்  தாள்களை பெறுவதற்காக மக்கள் மாதக்  கணக்கில் வங்கிகளுக்கும் வீடுகளுக்கு மாக அலைக்கழிக்கப்பட்டனர். ஏராளமா னோர் ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க நின்ற னர். அவர்களில் பலர் உயிரை விட்ட சோக மும் நிகழ்ந்தது. ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கிப்  போயின. பல சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்தே போயின. 

கறுப்புப் பணம் ஒழிப்பு, கள்ளப்பணம் ஒழிப்பு, தீவிரவாதத்துக்கு செல்லும் நிதியை தடுத்தல், பணப்புழக்கத்தை குறைத்தல் ஆகிய காரணங்களைக் கூறியே பிரதமர்  மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தார். ஆனால், தற்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும்,  தற்போது வரை மோடி சொன்ன காரணங் கள் ஒன்றுகூட நிறைவேறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த பழைய 500 ரூபாய், 1000 ரூபாய்  நோட்டுக்களில் 98.96 சதவிகித நோட்டுக்கள்  வங்கிக்கு வந்து விட்டன. இதனால் மோடி  சொன்ன கறுப்புப் பணம் பிடிபடவில்லை. புழக்கத்திற்கு வந்த சில மாதங்களிலேயே புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் காஷ்மீர் எல்லையிலுள்ள தீவிரவாதிகளிடம் தாராளமாக புழக்கத் துவங்கின. இவைதவிர ஒவ்வொரு ஆண்டும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பிடிபடு வது- அதிலும் அந்த கள்ள நோட்டுக்கள் மோடி அரசு புதிதாக வெளியிட்ட ரூபாய்  நோட்டுக்களாக இருப்பது அன்றாடச் செய்தி களாகி விட்டன. இதனால் கள்ளநோட்டுக் களையும் தடுக்க முடியவில்லை. இவை தான் இப்படியென்றால், இப்போதுவரை ரொக்கப் புழக்கத்தையும் மோடி அரசால் குறைக்க முடியவில்லை.

பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பு- அதா வது 2016, நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழு வதும் புழக்கத்தில் இருந்த ரொக்கப் பணத்தின் மதிப்பு 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய். 2017-18 நிதியாண்டில் நாட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் புழக்கத்தில் இருந்த ரொக்கத்தின் அளவு 10.7 சதவிகிதமாக இருந்தது. கொரோனா பேரிடர் சமயத்தில் உற்பத்தி பெருமளவு முடங்கி இருந்த 2020-21 நிதியாண்டில் கூட  புழக்கத்தில் இருந்த ரொக்கத்தின் அளவு  ஜிடிபி-யில் 14.2 சதவிகிதமாக அதிகரித்தே காணப்பட்டது.  இதனிடையே, பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 அக்டோபர் 21 அன்று புழக் கத்தில் இருந்த ரொக்கப் பணத்தின் மதிப்பு  30 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பதும், இது, கடந்த 2016-இல் இருந்த ரொக்கப் புழக்கத்தை விட 71.84 சதவிகிதம் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதிலும் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் பணப் பரிவர்த்தனைகள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி கரித்துள்ளது. சிறு நகரங்களில் இன்னும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள்  பொருட்கள் வாங்க ரொக்கப் பணத்தையே  கொடுக்கின்றனர். சென்னை, பெங்களூரு  போன்ற நகரங்களிலேயே 50 சதவிகித  மக்கள் இன்னும் ரொக்கப் பணத்தையே பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவ ரங்களும் வெளியாகியுள்ளன.

ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதையே இது காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ‘2022 நவம்பர் 8’-ஆம் தேதியுடன் பணமதிப்பு நீக்கம் நடந்து 6 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கறுப்புப் பண ஒழிப்பு, ரொக்கப் பணப் புழக்க குறைப்பு என்ற பெயரில் நாட்டு  மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி யதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க  வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். “பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது, நாட்டை கறுப்புப் பணத்தில் இருந்து விடு விக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது வர்த்தகத்தை அழித்து, வேலைவாய்ப்புகளை பறித்து விட்டது.  அந்த அதிர்ச்சி சம்பவம் முடிந்து 6 ஆண்டு கள் ஆன நிலையில், பொதுமக்களிடையே புழங்கும் பணம், 2016-ஆம் ஆண்டு இருந்  ததை விட 72 சதவிகிதம் அதிகரித்துள் ளது. ஆனால், பிரதமர் மோடி, பொருளா தார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த காவி யத் தோல்வியை இன்னும் ஒப்புக்கொள் ளவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.