திருமலை, அக். 29 - ஆர்எஸ்எஸ் மாணவர் பிரி வான ஏபிவிபி-யைச் சேர்ந்த நபரிடமி ருந்து ரூ. 70 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக காரில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத் தலை நகர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போலீசார் வெள்ளியன்று வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது, எவ்வித ஆவணங்களும் இல்லாமல் ரூ. 70 லட்சம் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி யதில், அவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த கிஷன் ராவ் (38), வெமுலா வம்ஷி (26) என்று கூறியுள்ளனர். மேலும், கிஷண்ராவ் நிஜாம் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி இருப்பதும், அதற்கு முன், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப் பான ஏபிவிபி-யின் மண்டல பொறுப் பாளராக இருந்ததும் தெரியவந் துள்ளது. காரில் கொண்டு செல்லப் பட்ட பணத்தை மது என்பவர் தன்னி டம் வழங்கியதாகவும் அவர் தெரி வித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் முனு கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர் தல் நடைபெறவுள்ள வாக்கா ளர்களுக்கு கொடுப்பதற்காக இந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்க லாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.