states

img

12-ஆம் வகுப்பு வினாத்தாளால் பதறிப்போன பாஜக!

புதுதில்லி, டிச.4- சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர் வுக்கான வினாத்தாளில், குஜராத் மாநி லத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை குறித்து இடம் பெற்ற கேள்வி, ஒன்றிய பாஜக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்சிஇஆர்டி தயாரித்த 12-ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் ‘இந்திய சமூக’வியலில், ‘கலாச்சார வேற்றுமையின் சவால்கள்’ என்ற அத்தியாயம் உள்ளது. அண்மையில் நடைபெற்ற பருவத் தேர்வில், இந்த அத்தியாயத்தில் இருந்து மாணவர்களுக்கு கேள்வி வைக்கப்பட்டுள்ளது. “குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு இஸ்லாமியர் களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும்போது நடைபெற்றது?” என்பதுதான் அந்தக் கேள்வி. இதுதான் பாஜக தலை வர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.

இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 2002-இல் குஜராத் மாநில உள்துறை அமைச்ச ராகவும் இருந்தபோதுதான் இஸ்லா மியர்களுக்கு எதிரான மிகக் கொடூர மான வன்முறை நடந்தது. ஆயிரக்க ணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ராஜ தர்மத்தை மீறி விட்டார்; இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார் என அன்று பிரதமராக இருந்த வாஜ் பாயே நொந்து கொண்டார். இனி எந்த முகத்தோடு நான் வெளிநாடுகளுக்குச் செல்வேன்? என்றும் புலம்பினார்.  இந்த வன்முறை வெறியாட்டத்தை மக்களின் நினைவுகளிலிருந்து அழிக்க இப்போதுவரை பாஜக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது.  

இந்நிலையில்தான், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய கல்வி வாரியமே, குஜராத் வன்முறையை மீண்டும் நினைவு படுத்தி, பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. இது எப்படி நடந்தது? இதை ஏற்க முடியாது என்று கொந்தளித்து விட்டனர்.  இதையடுத்து, “பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முறையற்றது. கேள்வித்தாள் அமைப்பதற்காக வந்த ஆசிரியர்கள், சிபிஎஸ்இ விதிமுறைகளை மீறி யுள்ளனர். தவறு நடந்துள்ளதை சிபி எஸ்இ ஒப்புக் கொள்கிறது. சம்பந்தப் பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண் டும். நடு நிலைத்தன்மையுடன் கேள்வி கள் அமைய வேண்டும். சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனத்தை புண் படுத்தும் வகையில் வினாக்கள் அமை யக்கூடாது என்று வினாத்தாள் தயா ரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என சிபிஎஸ்இ தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.