ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னணியில், பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்து வருவதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கோலிபர் சவுக்கில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைத் திரும்பபெறாவிட்டால், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதில் அவர்கள் எச்சரித்துள்ளனர்.