கோயம்புத்தூர், டிச.9- இந்திய பொதுத்துறை நிறு வனங்களின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையெல்லாம் தனி ஒரு முதலாளியான அதானிக்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிற பாஜக, அன்னூர் விவசாய நிலங்களை பாதுகாக்கும் என அண்ணாமலை சொல்வது, தேர்தல் நாடகத்திற்காகவே என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் குற்றம்சாட்டினார். கோவை மாவட்டத்தில், மேட்டுப் பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றி யங்களில் உள்ள பள்ளேபாளை யம், இலுப்பநத்தம், பொகளூர், குப்ப னூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக் கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிட்கோ தொழில் பேட்டை அமைக்க தமிழக முடிவு செய்தது. இதனை எதிர்த்து அன்னூர் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்கேற்று உரையாற்றினார். இதில், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்
2013 நிலம் கையகப்படுத்தல் சட்டம்
பெ.சண்முகம் ஆற்றிய உரை யின் அம்சங்கள் வருமாறு: ‘‘சிப்காட் அமைக்க நிலங்கள் பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில் அன்னூர் விவசாயிகள் உள்ளனர். இந்த பதற்றத்தைப் போக்க வேண்டி யது தமிழக அரசின் கடமை. தமிழக முதல்வருக்கு தெரிந்தேதான் இந்த நிலம் கையகப்படுத்துதல் நடக் கிறதா என்ற கேள்வி எழுகிறது. 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றம் சட்டம் விவ சாயிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், இப்போது கொடுக்கப்பட்டுள்ள அரசாணையில் எந்த தொழில் நிறுவனம் அமையப்போகிறது, யாரு டைய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்ற விவரங்களே இல்லை. ஆனால், பொத்தாம்பொதுவாக அரசாணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. 1997-ஆம் ஆண்டு சட்டத்தை கொண்டு வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்தொடர்ச்சி யாகத்தான், இந்தியாவில் 8 வழிச் சாலை, கெயில் குழாய் பதிக்க, தனி யார் தொழில் நிறுவனங்கள் அமைக்க நிலங்கள் எடுப்பதற்கு எதி ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அரசாணை யில் எந்தெந்த நிலங்கள் மற்றும் யாருடைய நிலங்கள் கையகப் படுத்தப்படுகிறது என்று சொல்ல வேண்டும்; ஆனால், இதில் அவ்வாறாக இல்லை. மேலும், தொழிற்சாலை அமைய வுள்ள பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன ஏற்பட போகிறது என்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி தனி யார் தொழிற்சாலை அமைக்க 80 சத விகிதமும், அரசு சார்பில் தொழிற் சாலை அமைக்க 70 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண் டும். அவ்வாறு இல்லையென்றால் திட்டத்தை கைவிட வேண்டும்.
1997 சட்டத்தின் படி...
தற்போது அன்னூரில் 1997 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப் படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி நிலம் எடுக்கப் பட்டால் இழப்பீடு வருவதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக் கும். அதற்கு உதாரணம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள், இழப்பீடு கேட்டு நடத்து வரும் போராட்டம் தான். 42 வருடங்களாகியும் தற்போது வரை தமிழக அரசு அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து வருகிறது. இதற் கிடையே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 2013 ஆம் ஆண்டு பெரும் போராட்டம் நடத்தியதன் விளைவாக 45 கோடி ரூபாய்உரிய விவசாயிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தற்போது அன்னூர் நிலங்கள் எடுப்பது தொடர்பாக, தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதில், 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் விவசாய நிலங்களாகும். ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் நிறைந்த பகுதி இது. அப்படி அந்த நிலங்களை எடுத்துக்கொண்டால், இப்பகுதி விவசாயிகளுக்கு நிலம் இழப்பு மட்டுமல்ல, மிகப்பெரிய பொருளாதார இழப்பும் ஏற்படும். இங்கு கட்டப்படும் தொழிற்சாலை மேலும் பவானி ஆற்று நீரை மாசு படுத்தும்; அது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை மொத்தமாக பாதிக்கும். ஆகவே, அரசு இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.
பாஜக, அதிமுக தேர்தல் நாடகம்
அதேநேரத்தில், அன்னூர் விவசாயிகளின் நிலங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறையில்லாத கட்சி மட்டுமல்ல, கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய விவசாயத்தை நாசம் செய்யத் துடிக்கிற கட்சியாக பாஜக உள்ளது. அதுதான் அவர்களின் கொள்கையாகவும் இருக்கிறது. இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்களுக்கு லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சொத் தாக உள்ளன. இவை அனைத்தை யும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசுதான் பாஜக அரசு. அத்தகைய பாஜக-வின் அண்ணாமலை அன்னூர் பகுதி விவ சாய நிலங்களையெல்லாம் பாது காத்துக் கொடுப்பேன் என்கிறார். இதனை யாராவது நம்ப முடியுமா? இந்தியாவில் உள்ள பல லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை யெல்லாம் ஒரு முதலாளிக்கு அள்ளிக்கொடுத்தவர்கள், இங்கே நிலத்தை பாதுகாப்பேன் என்று போடுகிற வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எட்டுவழிச்சாலைக்காக நிலம் எடுக்க இவர்கள் விவசாயி களை படுத்திய பாடு தெரியாதா? இப்போதுவரையில் அதே நிலைப் பாடுடன்தான் அதிமுக உள்ளது. எட்டுவழிச்சாலைக்கு விவசாயிகள் 99சதவீதம்பேர் ஆதரவு என சட்ட மன்றத்தில் பச்சையாகப் பொய் சொன்னவர்தான் இந்த எடப்பாடி பழனிச்சாமி வகையாறாக்கள். ஆகவே, பாஜகவோ, அதிமுகவோ விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கிற இயக்கமல்ல; இவர்கள் தேர்தல் அர சியலுக்காக நாடகத்தை நடத்து கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கனக ராஜ், என்.ஆறுச்சாமி, அன்னூர் தாலுகா செயலாளர் முகம்மது முசீர், சிபிஎம் அன்னூர் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.மணி கண்டன் மற்றும் அப்பகுதி விவசாய போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.