https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
ஜி-20 உச்சி மாநாடு துவங்க உள்ள நிலையில், மோடி அரசு தனது வழக்கமான படாடோப பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தமது அரசு உலக அளவில் இந்தியாவை பெரும் முன்னேற்றப் பாதையில் செலுத்தி வருவதாக மிகப்பெரும் பொய்களை அள்ளிவிட்டு வருகிறது. ஆனால் உண்மையில் உலக அரங்கில், மோடி ஆட்சியின் கீழ் இந்தியா மிகப்பெரும் வீழ்ச்சிகளை சந்தித்துள்ளது.
உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் ஆய்வின்படி, இந்தியா, ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைகளில் கடந்த ஆண்டு மொத்தமுள்ள 180 நாடுகளில் 150வது இடத்தில் இருந்தது; இந்த ஆண்டு 11 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 161வது இடத்திற்கு சரிந்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சட்ட நடைமுறைகள், சமூக துறைகளில் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் அனைத்திலும் வீழ்ச்சியே!