states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. “ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் 370ஆவது சட்டப்பிரிவை மீட்ப தற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்கிறேன்” என தேசிய மாநாட்டுத் தலைவர் அகா ரூஹுல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார்.
  2. உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில்,  வாரணாசியில் அமைக்கப்  பட்டிருக்கும் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவ மனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான  நிலையத்தில் 2 ஆயிரத்து 870 ரூபாய் கோடி  மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்  மற்றும் புதிய முனைய கட்டடம் மற்றும் தொடர்பு டைய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
  3. “அசாம் ஒப்பந்தம் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது அல்ல, நான் எதிர்வினையை வெளிப்படுத்துவேன்” என அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
  4. மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.3.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  5. தில்லியில் வயதான தம்பதியை துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக பிடித்து, வீட்டில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகை  மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றனர். 
  6. “ஆந்திராவில் குழந்தை பிறப்பு சதவீதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்  என்ற சட்டத்தை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
  7. செபி சட்டம் மற்றும் கூட்டு முதலீட்டுத் திட்டம் (சிஐஎஸ்) விதிமுறைகளின் கீழ் 23  ஆண்டுகளுக்கும் மேலாஎ நிலுவையில் இருந்த வழக்கில் ஒரு தனியார் நிறுவனம் மற்றும் அதன்  மூன்று இயக்குநர்கள் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  8. “நாட்டின் தலைநகரில் (தில்லியில்) சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சிஆர்பிஎப் பள்ளி குண்டுவெடிப்பு அம்பலப்படுத்தி யுள்ளது. தில்லி காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது. அதனால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு இப்படி உள்ளது. தில்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிடம் உள்ள சூழலில், இதைப் புறக்கணித்து தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல் பாட்டை தடுக்கும் வேலையை மட்டுமே கவ னித்து வருகிறது. எனவே, தில்லியின் தற்போ தைய நிலைமை மும்பையின் பாதாள உலக நாட்களைப் போன்று ஆகிவிட்டது. துப்பாக்கிச் சூடு, கும்பல் பணம் பறிப்பது தொடர்கிறது. அதைத்  தடுக்கும் எண்ணமும் திறனும் பாஜக அரசுக்கு இல்லை” என தில்லி முதல்வர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.