states

img

சந்திரபாபு மிரட்டலுக்கு அஞ்சிய அமித் ஷா திருப்பதி கோவிலில் விசாரணை செய்யாமல் ஓட்டம் பிடித்த மோடி அரசு

2024ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற முழக்கத்துடன் களமிறங் கிய பாஜக, வெறும் 240 இடங் களை மட்டுமே கைப்பற்றிப் பெரும்  பான்மையை இழந்தது. பெரும் பான்மைக்கு 272 இடங்கள் தேவை  என்ற நிலையில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 எம்.பி.க்கள், சிவசேனா (ஷிண்டே) கட்சியின் 7 எம்.பி.க்கள், லோக்  ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின்  5 எம்.பி.க்கள் என தேசிய ஜன நாயக கூட்டணி கட்சிகளின் தய வால் மோடி மூன்றாவது முறை யாகப் பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதில் தெலுங்கு தேசம், ஐக்கிய  ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சி கள் ஆதரவை வாபஸ் பெற்றாலே மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற சூழல் உள்ளது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  சொல்வதை எல்லாம் தலை யாட்டிப் பொம்மையாகக் கேட்டு மோடி அரசும், பாஜகவும் ஆட்சிக் காலத்தை நகர்த்தி வருகிறது.

விசாரணை செய்யாமல் ஓட்டம் 

இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும்  லட்டு கவுண்டரில் ஏற்பட்ட தீ விபத்து விவகாரத்தில் சந்திரபாபு கொடுத்த அழுத்தத்தால் ஒன்றிய  அமைச்சர் அமித் ஷா பின்வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழு மலையான் கோவிலில் சமீபத்தில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அதே போல் 2 வாரத்திற்கு முன்பு திருப்  பதி லட்டு கவுண்டரில் ஏற்பட்ட தீ  விபத்தில் பொருட்கள் சேதம டைந்தன. இந்த இரண்டு சம்பவங்  கள் காரணமாக திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருப்  பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய  உள்துறை அமைச்சகம் உத்தர விட்டு நோட்டீஸ் அனுப்பியிருந் தது. மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் ஞாயிற் றுக்கிழமை அன்று திருமலை -  திருப்பதியில் இரண்டு நாட்க ளுக்குத் தங்கி தேவஸ்தான அதி காரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் நோட்டீஸில் தெரி விக்கப்பட்டிருந்தது.

பின்வாங்கிய அமித் ஷா 

இந்நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆந்திர மாநிலம் விஜயவாடா கன்னாவரத்தில் என்டிஆர்எப் புதிய வளாகத்தை ஞாயிற்று கிழமை  திறந்து வைத்தார். இதற்காக சனிக்கிழமை அன்று விமான நிலை யம் வந்த அவரை முதல்வர் சந்திர பாபு, துணை முதல்வர் பவன்  கல்யாண் ஆகியோர் வரவேற்ற னர். தொடர்ந்து அமித் ஷாவை  முதல்வர் தரப்பினர் சந்தித்துப் பேசி னர். அப்போது, ஏழுமலையான் கோவில் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறித்து அமித் ஷாவிடம் சந்திர பாபு முறையிட்டார். “எங்கள் மாநில  விவகாரம். இதனை ஏன் பெரிது படுத்த வேண்டும்? நாங்கள் விசா ரிக்கிறோம்” என அமித் ஷாவிடம் சந்திரபாபு கூறினார். அதன்பேரில் அடுத்த சில நிமி டங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளரின் வருகையை ரத்து செய்வதாக, ஒன்றிய உள்துறை அலுவலகம் தேவஸ்தானத்திற்குத் தெரி வித்தது. 

பாஜக அதிர்ச்சி 

திருப்பதி கோவிலின் கூட்ட நெரி சல் மற்றும் தீ விபத்து சம்ப வங்களை வைத்து அரசியல் ஆதா யம் காணவே “மோடி அரசின் விசா ரணை” என்ற பெயரில் அமித் ஷா மூலம் காய் நகர்த்தியது ஆந்திர மாநில பாஜக. ஆனால் சந்திரபாபு இதனை முன்கூட்டியே அறிந்து அமித் ஷாவிடம் நேரடியாக அழுத்தம் கொடுத்தார். மத்தியில் பெரும்பான்மை விவகாரம் கார ணமாக சந்திரபாபுவின் அழுத் தத்திற்கு அமித் ஷா அடிபணிந்து திருப்பதி கோவிலில் விசாரணை செய்யும் முடிவை ரத்து செய்துள் ளார். தங்களது அரசியல் ஆதாய நிகழ்வை சந்திரபாபு தகர்த்ததால் ஆந்திர மாநில பாஜக அதிர்ச்சி யில் உறைந்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு

திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலை வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும், திருப்பதி முன்னாள்  எம்எல்ஏவுமான கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகை யில், “திருப்பதியில் நடந்த கூட்ட நெரிசல், தீ விபத்து குறித்து விசா ரணைக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் வர இருந்த நிலை யில், விஜயவாடாவுக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவிடம், முதல்வர் சந்திரபாபுவும், துணை முதல்வர் பவன் கல்யா ணும் வேண்டுகோள் விடுத்தனர். திருப்பதி தேவஸ்தானத்தில் உள்துறை செயலாளர் வந்து விசாரணை நடத்தினால் மாநில அர சுக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே இந்தப் பயணத்தை ரத்து  செய்யும்படி கேட்டனர். இதனால்தான் விசாரணையை உள்துறை  அமைச்சகம் உடனடியாக ரத்து செய்துள்ளது. இந்த ஒரு சம்ப வமே திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்தது என்பதற்கு உதா ரணம்” என அவர் குற்றம் சாட்டினார்.