அம்பேத்கர் சிலை உடைப்பு உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல்
வன்முறைச் சம்பவங்களின் கூடாரமாக மாறி வரும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் அம்பேத்கரின் சிலை உடைப்புச் சம்பவம் காரணமாக, மாநிலம் முழு வதும் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது. உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சக்கோதர் கிரா மத்தின் பூங்காவில் அம்பேத்கரின் சிலை உள்ளது. திங்களன்று இரவு மர்ம நபர் கள் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த உள்ளூர்வாசிகள் பூங்கா அருகே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சிகள், தலித் அமைப்புகள் குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்தன. இதனால் மிர்சாபூர் மாவட்டம் மட்டுமின்றி அதனைச் சுற்றி யுள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களி லும் பதற்றமான சூழல் நிலவி வருகி றது. மேலும் “பீம் ஆர்மி” மாநிலம் முழு வதும் மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் புதிய சிலை நிறுவப்படும் என கிராம மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து சக்கோதர் கிராமவாசிகள் தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். எனினும் மிர்சாபூர் மாவட்டத்தில் பதற்றச் சூழல் நிலவுகிறது.