states

ரயில்வே மருத்துவமனைகளை மக்கள் பயன்படுத்த அனுமதியளித்திடுக : ரயில்வே அமைச்சகம் உத்தரவு

புதுதில்லி,ஜன.11- நாட்டில் கொரோனா  தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், ரயில்வே மருத்துவமனைகள் மற்றும்  சுகாதார கட்டமைப்புகளை  பொது மக்களும் பயன்படுத்த அனுமதிக்கு மாறு, அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. கே. திரிபாதி, மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர்கள், அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் அனைத்து மண்டல ரயில்வே மற்றும் உற்பத்திப் பிரிவுகளின் பொது மேலாளர்கள் மற்றும் கோட்ட ரயில்வே மேலா ளர்கள் பங்கேற்ற கூட்டம்  காணொலி வாயிலாக நடைபெற்றது. இக் கூட்டத்தில்ரயில்வே மருத்து வமனை கட்டமைப்புகள், குழந்தை கள் வார்டு செயல்பாடு, தடுப்பூசி - ரயில்வே முன்களப் பணியாளர் களுக்கு முன்னெச்சரிக்கை தவணை உட்பட,  குழந்தைகள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவது.மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் விநியோகம், ஜியோ லைட் கையிருப்பு மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் மற்றும் திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்கு களின் செயல்பாடு மற்றும் கோவிட் சிகிச்சைக்கு முக்கியமாக தேவைப் படும் சாதனங்கள், ஆக்சிஜன் உற்பத்தி  பிரிவுகளை தொடங்குதல் (மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகளில், 78 ஏற்கனவே செயல்பா ட்டிற்கு வந்துள்ளது,  17 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது )போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.