states

img

உத்தரகண்ட் முன்னாள் அமைச்சர் மருமகளுடன் காங்கிரசில் இணைந்தார்...

டேராடூன், ஜன.22- பாஜக-விலிருந்து நீக்கப்பட்ட உத்தரகண்ட் மாநில அமைச்சர் ஹரக் சிங் ராவத், தனது மருமகள் அனுகிருதியுடன் காங்கிரசில் ஐக்கி யமாகியுள்ளார். உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஹரக் சிங் ராவத். காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த இவரை பதவி ஆசை காட்டி, கடந்த 2016-ஆம் ஆண்டு பாஜக தன்பக்கம் இழுத்துக் கொண்டது. அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கியது.  ஆனால், சமீபகாலமாக பாஜக தலைமை மீது ஹரக் சிங் ராவத் அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, ஹரித்துவாரில் மருத்து வக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட வில்லை என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று அறிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே கடந்த வாரம் ஹரக் சிங் ராவத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். பாஜக விலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, வெள்ளிக்கிழ மையன்று அவர் எதிர்பார்த்தபடியே காங்கிரசில் இணைந்துள்ளார். அவ ரது மருமகள் அனுகிருதியும் காங்கிர சில் தன்னை இணைத்துக் கொண்டுள் ளார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியா ளர்களிடம் பேசிய ராவத், பாஜக தன்னை ஆட்சி அமைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டு தற்போது தூக்கி எறிந்து விட்டதாக தெரி வித்துள்ளார்.  கடந்த 2016-இல் காங்கிரசை விட்டு வெளியேறி, பாஜக குறுக்குவழியில் ஆட்சிக்கு வருவதற்கு காரணமான 10 எம்எல்ஏ-க்களில் ஹரக் சிங் ராவத்தும் ஒருவராவார். அதனையே தற்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.