states

img

திரும்பும் திசையெல்லாம் அடிவாங்கும் அதானி

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’டும் அதானி குழும பத்திரங்களை பிணையமாக ஏற்க மறுப்பு!

புதுதில்லி, பிப். 9 - அதானி குழும நிறுவனங்கள், பெருமள வில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தங்களது பங்குகளின் சந்தை மதிப்பை போலியாக அதிகரித்துக் காட்டியதாகவும், போலியான வரவு செலவு கணக்கு, வரி  ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட தாகவும் ‘ஹிண்டர்ன்பர்க் ரிசர்ச்’ வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானியின் செல்வாக்கை மொத்தமாக குலைத்துப் போட்டுள்ளது.  அதானி குழும பங்குகள் கடும் சரி வினைக் கண்டு வருகின்றன. அதானி குழு மத்தின் சந்தை மதிப்பும், நிகர மதிப்பு இரண்டுமே அதல பாதாளத்தில் விழுந்துள் ளன. இதையடுத்து, பல்வேறு நிதி நிறு வனங்கள் அதானி குழுமத்திற்கு கடன் கொடுப்பதை நிறுத்தியுள்ளன.  குறிப்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி குழுமம் (Citigroup) மற்றும் சுவிட்சர்லா ந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) நிறுவனங்கள், அதானி குழுமப் பத்திரங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்தின.

 “அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை உள்ளிட்ட நிறுவனங்களின் பத்திரங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. அது ஜீரோவாகி விட்டது” என சுவிட்சர்லாந்து நிதி மேலாண்மை நிறுவனமான ‘கிரெடிட் சுவிஸ்’ அறிவித்தது. முன்னதாக அதானி  போர்ட்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங் களின் மதிப்பில், 75 சதவிகிதம் அளவிற்கு ‘கிரெடிட் சுவிஸ்’ கடன் வழங்கியிருந்தது. பின்னர் சிட்டி வங்கிக் குழுமமும், இதே முடிவையே கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில்தான், பிரபல பிரிட்டிஷ் வங்கியான ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ (Standard Chartered) நிறுவனமும், “அதானி குழுமப் பத்திரங்களை கடனுக்குப் பிணையமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தற்போது அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, இந்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ள தாக ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அதானி  கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை உள்ளிட்ட நிறுவனங்களின் பத்திரங்களுக்கு மதிப்பு இல்லை என  தெரிவித்துள்ளது. முன்னதாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களின் மதிப்பில், 75 சதவிகிதம் அளவிற்கு வங்கி கள் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதுவும் சிக்கலாகி யுள்ளது. இதன்மூலம் திரும்பும் திசையெங்கும் அதானி குழுமம் பலத்த அடிவாங்கி வருகிறது. எனினும், தங்களின் இந்த முடிவு தற்காலிகமானதுதான் என்றும் அதானி குழுமத்திற்கு ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நிறுவனம் ஆறுதல் அளித்துள்ளது.

மீண்டும் சரிந்த அதானி குழும பங்குகள் விலை

மும்பை, பிப். 9 - அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் சரிவை கண்டுள்ளன. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து, அக்குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிவடைந்தன. இதனிடையே, நிறுவன பங்குகளை அடமானம் வைத்து வாங்கிய சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தியதைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்கள் தர குறியீடுகளுக்கு தகுதியானவைதான் என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான ஜே.பி. மோர்கன் தெரிவித்தது. இவற்றின் எதிரொலியாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் புதனன்று கணிசமான உயர்வை கண்டன. இந்நிலையில், வியாழனன்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை மீண்டும் சரிந்தது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ. 323 குறைந்து ரூ. 1834-ஆக 15 சதவிகிதம் அளவிற்கு சரிந்தது. அதானி துறைமுகங்கள் நிறுவன பங்கு விலை ரூ. 44 சரிந்து, ரூ. 554-க்கு விற்பனையானது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ. 9 சரிந்து (5 சதவிகிதம்) ரூ. 172-க்கு விற்பனை ஆனது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ. 65 குறைந்து ரூ. 1248-க்கு சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ. 38 குறைந்து ரூ. 763 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை ரூ. 69 குறைந்து ரூ. 1324க்கும், அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ. 3 குறைந்து ரூ. 415-க்கும் வீழ்ச்சி அடைந்தது.