states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு “ஆபரேஷன் சிந்தூர்”  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கத்துடன் இந்திய  ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட் டது. இந்த தாக்குதலையடுத்து இந்  தியா - பாகிஸ்தான் இரு நாட்டு எல்லைகளி லும் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கைக்கு இடையே வியாழக் கிழமை அன்று காலை 11 மணியளவில்  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற வுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அரசு  சார்பில் பங்கேற்க உள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன. ஆனால் பிரதமர் மோடி பங்கேற்பது தொடர்பாக தகவல் எதுவும் இல்லை. மோடி பங்கேற்க  காங்கிரஸ் கோரிக்கை இத்தகைய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்  கேற்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்  செயலர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்த அவர் மேலும் கூறுகை யில்,”பஹல்காம் தாக்குதலுக்குப் பின்  ஏப்ரல் 24-ஆம் தேதியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து  கொள்ளுமாறு பிரதமருக்கு வேண்டு கோள் விடுத்தோம். ஆனால், அவர்  கலந்து கொள்ளவில்லை. வியாழக் கிழமை அன்று நடைபெறவுள்ள அனைத்  துக் கட்சிக் கூட்டத்திலாவது அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்” என அவர் கோரினார்.

எதிர்ப்பை மீறி சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன்  சூட் உள்ளார். இவரது பதவிக்  காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடை யும் நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிபிஐ புதிய இயக்கு நரை நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பிரவீன் சூட்டின் பத விக்காலத்தை நீட்டிக்க ராகுல் காந்தி  கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும்  ஒன்றிய அமைச்சரவையின் நியமனங்க ளுக்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரவீன் சூட்டின் பதவிக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிர வீன் சூட் சிபிஐ இயக்குநர் பதவிக்காலம்  அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பான அறிக்கையை அந்த குழுவின் செயலாளர் மணிஷா சக்சேனா வெளியிட்டுள்ளார்.

விமான சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர்

“ஆபரேஷன் சிந்தூர்” சம்பவத்  திற்கு பிறகு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட நாட்டின்  4 முன்னணி விமான நிறுவனங்கள், தங்களது விமான சேவைகளை ரத்து  செய்வதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகை யில்,”மே 10ஆம் தேதி வரை ஸ்ரீநகர்,  அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலை யங்களில் உள்நாட்டு விமான சேவை கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே  போன்று நாடு முழுவதும் 165-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளது” என கூறினர். அதே போல ஏர் இந்தியா விமான  நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கை யில்,”ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்  பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் விமான நிலை யங்களில் இருந்து அனைத்து விமான  சேவைகளும் மே 10ஆம் தேதி வரை  ரத்து செய்யப்படுகின்றன” எனக் கூறினர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தர்ம சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும்  அமிர்தசரஸ் விமான சேவைகள் ரத்து  செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தில்லியில் இருந்து 35 விமான சேவை கள் புதன்கிழமை அன்று அதிகாலை  12 மணி முதலே ரத்து செய்யப்பட்டுள்  ளதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. அதே போன்று ஆகாசா  ஏர் விமான நிறுவனம் தங்களது உள் நாட்டு சேவைகளை முற்றிலுமாக ரத்து  செய்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம்

“ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முவை நேரில்  சந்தித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்  தார். புதன்கிழமை அன்று பிற்பகல் குடி யரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, திரவுபதி முர்முவிடம் விளக்கம் அளித்த பின்பு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை முறியடிக்க செய்யப்பட்டிருக்கும் பாது காப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோ சனை நடத்தியதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன. புதுதில்லி

18 விமான  நிலையங்கள் மூடல்

“ஆபரேஷன் சிந்தூர்” தாக்கு தலுக்கு பாகிஸ்தான் பதில்  தாக்குதல் நடத்த வாய்ப்பி ருப்பதாக உளவுத் செய்திகள் வெளியாகி  வருகின்றன. இதனால் இந்தியா - பாகிஸ்  தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை யோர மாநிலங்களில் உள்ள பதான்கோட்,  ஜெய்சால்மர், சிம்லா, தரம்சாலா, லே,  ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜோத்பூர்,  ஜாம்நகர், சண்டீகர், தில்லி, ராஜ்கோட் என 18 விமான நிலையங்கள் மூடப்பட் டுள்ளன. மேலும் இந்த விமான நிலை யங்களின் வழியாக இயக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட விமான சேவைகளும்  மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்  யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ராய்ப்பூர்

சத்தீஸ்கரில் நக்சல்கள் என 15 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் தெலுங்கானா  எல்லையில் நக்சல்கள் என  15க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்  பட்டுள்ளனர். பிஜப்பூர் மாவட்டம் கர்ரே குட்டா மலைப்பகுதி அருகே புதன்  கிழமை அன்று நள்ளிரவு பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல்களுக்கு  எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. அப்போது நக்சல்களுக்கும் பாது காப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோத லில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாது காப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்  பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்  தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்  களைக் குறிவைத்து புதன்கிழமை அன்று  அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்கு தல் நடத்தினர். இதனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எப்போது வேண்டுமா னாலும், பதில் தாக்குதல் நடத்தப்படலாம்  என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் தற்  போதைய சூழலைக் கருத்தில் கொண்டு  பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்  டுள்ளது. குறிப்பாக ஜம்மு, சம்பா,  கதுவா, ரஜௌரி, பூஞ்ச் ஆகிய இடங்க ளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மறு அறிவிப்பு வரும்  வரை திறக்க வேண்டாம் என அறிவுறுத்  தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.