states

மணிப்பூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

புதுதில்லி, ஜூன் 23 - மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், ஜூன் 24 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறி விப்பில், “ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூன் 24 அன்று மாலை 3 மணிக்கு தில்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நில வரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2017 முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக-வே வெற்றி பெற்றது. பைரேன் சிங் முதல்வராக இருக்கிறார்.  முன்னதாக, 2022 தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்கு களைப் பெறுவதற்காக, அங்கு 53 சத விகிதமாக உள்ள ‘மெய்டெய்’ சமூ கத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அப்போதே, குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பழங்குடி அந்தஸ்து விவகாரம், கடந்த மே மாதம், மெய்டெய் - குக்கி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஆயுத மேந்திய மோதலாக உருவெடுத்தது. இந்த வன்முறை, மே 3 துவங்கி 50 நாட் களுக்கும் மேலாக, தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இரண்டு தரப்பிலும் இதுவரை 120  பேர் வரை உயிரிழந்து விட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். 47 ஆயிரம் பேர் இருப்பிடத்தை இழந்து, மணிப்பூருக்கு உள்ளேயே அரசு பாதுகாப்பு முகாம்களில் தஞ்ச மடைந்துள்ளனர்.  ராணுவம் உட்பட 50 ஆயிரம் பேர்  பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டும் வன்முறைக் கட்டுக்குள் வர வில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா  நான்கு நாட்கள் மணிப்பூரில் முகா மிட்டார். எனினும், அவரின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஆளுநர் தலைமையிலான அமைதிக்குழுவாலும் எந்தப் பயனுமில்லை. அரசு நிர்வாகமே, இரண்டு தரப்பாக பிளவுபட்டுள்ளதால் வன்முறை தொடர்ந்து கொண்டிருக் கிறது. இந்நிலையில், மணிப்பூரில் குடி யரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்து வது பற்றி ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும்; பிரதமர் மோடி இந்த விவ காரத்தில் தலையிட்டு, அனைத்துக் கட்சி யினரைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மணிப்பூர் மாநில எதிர்க்கட்சிகள், இந்த விவ காரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க,  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தில்லி யிலேயே முகாமிட்டன. ஆனால், பிர தமர் மோடி கடைசிவரை எதிர்க்கட்சி களைச் சந்திக்கவில்லை. அவர் 5 நாள் பயணமாக அமெரிக்கா, எகிப்து சென்று விட்டார். இந்நிலையில்தான், ஜூன் 24 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அர சின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள் ளது.