திருவனந்தபுரம், ஜன. 31 - அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத்தின் 49வது அகில இந்திய மாநாடு ஜன.27-29 தேதி களில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை கேரள சட்டமன்ற பேரவைத் தலைவர் ஏ.எம்.ஷம்சீர் தொடங்கி வைத்தார். சிஏஜி-கணக்கு தணிக்கை முறையை வலுப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவராக கி.ரமேஷ், பொதுச் செயலாளராக தபஸ் போஸ், பொருளாளராக வி.என்.பினு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.