புதுதில்லி, ஜன.27- கியூபாவிற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவிற்கு, தலைநகர் புதுதில்லி யில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் சார்பில் எழுச்சிமிகு வர வேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துகொண்டார்கள். அரங்கு நிறைந்த கூட்டத்தில் அலெய்டா குவேரா பேசியதாவது: கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார முட்டுக்கட்டை குறித்து பேசுவது போன்று, அதனை எதிர்கொண்டு நாங்கள் எப்படி வாழ்ந்து வருகிறோம் என்றும் பேசியாக வேண்டும். உல கில் பல நாடுகள் தங்கள் நாட்டில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஐந்து வயதுக் குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்துகள் எளி தாகக் கிடைத்தும் அமெரிக்கா மீதான அச்சத் தின் காரணமாக அதனை எங்களிடமிருந்து பெற்று அளிக்க முடியாமல் உள்ளனர். அமெரிக்காவை எங்களால் எதிர்த்துப் போராட முடிகிறது என்றால் அதற்கு காரணம், கியூப மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையே ஆகும். உலகில் காட்டுமிராண்டித்தனம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்த்து நின்று முறியடித்து, அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை நிலைநிறுத்திடவேண்டும் என்ப தில் கியூபா நம்பிக்கை கொண்டிருக்கிறது. இவ்வாறு அலெய்டா குவேரா கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை கியூபாவும் இந்தியாவும் ஒருமைப் பாட்டுடன் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்தார். இப்போதைய இந்திய அரசாங்கம் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்காத தற்கு வருத்தத்தை வெளிப்படுத்தினார். ‘தி வயர்’ இணைய இதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் பேசுகையில், இந்தியா ஜி.20 நாடு களின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருப்ப தைப் பயன்படுத்திக்கொண்டு, கியூபா மீதான ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற பொரு ளாதாரத் தடைக்கு முடிவுகட்ட முன்மொழி வினைக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, கியூபத் தூதர் அலெஜாண்ட்ரோ சிமன்காஸ் மற்றும் கியூபா விற்கான தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் எம்.ஏ. பேபி முதலானவர்களும் உரை யாற்றினார்கள். தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் நந்திதா நாராயணன் நன்றி கூறினார். (ந.நி.)