states

img

ராஜ்நாத் சிங் கூறுவது அனைத்தும் பொய் ; மோடி அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவில்லை

மோடி அரசின் அக்னிவீர் திட்டத் தின் கீழ் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய  ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய் யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக் குப் பிறகு அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும் என்ற நிலையில், மற்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு துரத்தப்படுகின்றனர். அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களின் ஆண்டுச் சம்பளம் ரூபாய் 4.76 லட்சத்தில் இருந்து தொடங்கி, ரூ.6.92 லட்சம் வரை  சேவை முடிவடையும் வரை வழங்கப்படும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது ரூபாய் 11.71 லட்சம் வழங்கப் படுகிறது. பணியில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு ரூ.48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. பணி யின் போது இறந்தால் ரூ.44 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது. இதுதான் மோடி அரசின் அக்னிவீர் திட்டம் ஆகும். எல்லாம் பொய்... இந்த அக்னிவீர் திட்டத்தில் உயிரிழந்த முதல் ராணுவ வீரரான பஞ்சாப்பின் அஜய் சிங் குடும்பத்திற்கு இன்னும் ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதி யானாவுக்கு அருகில் உள்ள ராம்கர் சர்தா ரன் கிராமத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங்  என்பவரின் மகன் அஜய் சிங் அக்னிவீர்  திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜனவரி 2024இல் ஜம்மு-காஷ்மீ ரின் ரஜோரி பகுதியில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்ததில் பலியானார். அஜய் சிங் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி அளித்துள்ள நிலையில், இந்திய ராணுவம் ரூ.98 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால் மோடி அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்பது அவரது தந்தை மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அஜய் சிங்கின் தந்தை சரண்ஜித் சிங் ஊடகம் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அஜய் சிங்கிடம் கூறு கையில்,”பஞ்சாப் அரசிடமிருந்து தனது குடும்பம் ரூ.1 கோடி பெற்றுள்ளது. அதன் பிறகு ராணுவம் தரப்பில் ரூ.98 லட்சம் இழப்பீடு கொடுத்தது உண்மைதான். நாங்கள் பெற்ற ரூ.98 லட்சம் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை ஆகும். அதாவது ராணுவத்திடமிருந்து ரூ. 48 லட்சத்திற்கான காசோலை காப்பீட்டுத் தொகையாக இருக்கும்.அது இழப்பீடு அல்ல.

மேலும் ரூ.50 லட்சம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுவும் எனது மகன் வைத்திருந்த காப்பீட்டு பாலிசியின் தொகைதான். ஆனால் ஒன்றிய அரசு எங் களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிய தாக நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பா னது. இதுவரை ஒன்றிய அரசிடமிருந்தோ  அல்லது ராணுவத்திடமிருந்தோ எங்களு க்கு எந்தவித இழப்பீடும் கிடைக்க வில்லை. எங்கள் மகன் இறந்ததற்கு ஒன்றிய அரசு ஆறுதல் கூடகூறவில்லை, குறிப் பாக இரங்கல் கடிதம்கூட அனுப்ப வில்லை” என கண்ணீருடன் கூறினார். மோடி அரசுக்கு சிக்கல் 18ஆவது மக்களவை முதல் கூட்டத்தொடரின் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல, பிரதமர் அலுவலகத்தின் திட்டம். அந்த திட்டம் பிரதமரின் யோசனை, ராணுவத்தின் யோசனை அல்ல என்பது ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் தெரியும்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,“தவறான கருத்துகளை கூறி சபையை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது. போரின் போது அல்லது எல்லைப் பாதுகாப்புப் பணியின் போது அக்னிவீரர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனக் கூறினார்.  இவரது கூற்றுக்கு மாறாக அக்னி வீரர் திட்டத்தில் ராணுவத்தில் இணைந்து உயிரிழந்த அஜய் சிங்கின் தந்தை சரண்ஜித் சிங் கருத்து கூறியுள்ள நிலை யில்,  அக்னி வீரர் திட்டம் மூலம் மோடி அர சுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.