states

இந்தித் திணிப்புக்கு எதிராக வேகமெடுக்கும் போராட்டம்!

புதுதில்லி, அக்.13- ஒன்றிய அரசின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற நரேந்திர மோடி அரசின் முடிவு நாடு முழுவதும் எதிர்ப் புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வரு கிறது. வழக்கமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் மட்டுமே இந்தித் திணிப்புக்கு எதி ரான குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ஆந்திரா, தெலுங்கானா தாண்டி மேற்குவங் கத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள்  வேகமாக எழுந்துள்ளன. அங்கு போராட்டங்க ளும் துவங்கியுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவர் திரவு பதி முர்முவிடம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை  அளித்தது. அதில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ்  போன்றவற்றிலும், மத்தியப் பல்கலைக்கழகங் களிலும் இந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்  டும் என்று பரிந்துரை செய்தது.  இது இந்தி பேசாத மாநிலங்களில் சல சலப்பை ஏற்படுத்தியதுடன், கடும் கண்டனங்க ளும் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் உடனடியாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“பன்முகத்தன்மைதான், இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும், வலிமையுமாக இருக்  கிறது. அப்படியிருக்க, ‘பாரத் மாதா கீ ஜே’  என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு  அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக் கொண்டே இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியா வின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட  நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதி ரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேரா பத்தை விளைவிக்கும்” என்று கூறிய தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியை கட்டாய மாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று எச்ச ரிக்கை விடுத்தார். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் திமுக இளைஞரணி சார்பில் அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்  கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர்  மோடிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதி னார். 

“நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது. இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8-வது  அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும்  இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர்  தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே  வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்  படுத்தி விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியை யும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக் கூடாது.

அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்  கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு  நல்லதல்ல. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்  படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தினார். தமிழக, கேரள முதல்வர்களைத் தொடர்ந்து,  இந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்த தெலுங் கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மக னும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ், “இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தி யும் ஒன்று. ஐ.ஐ.டி.களிலும், பிற ஒன்றிய அரசின்  வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட்  டாயமாக திணிப்பதன் மூலம், பாஜக கூட்டணி  அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது. மொழி யை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தித் திணிப்பு கூடாது” என்று எச்சரித்தார். இதேபோல கர் நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெங்கால் போக்கோ (Bangla pokkho) எனும் அமைப்பு  இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உடனடியாக பேரணி ஒன்றை நடத்தி, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வங்கமொழி இலக்கியவாதிகளான சிஷேந்து முகோபாத்யாய், கவிஞர் ஜெய் கோஸ்வாமி, கல்வியாளர் பவித்ரா சர்க்கார் போன்றோர் ஆதர வுடன் நடைபெற்ற இந்த பேரணியில், ஒன்றிய  அரசின் பணிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை திணித்து இந்தி தெரியாத மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப் பட்டுள்ளன.

மேலும், இந்தப் பேரணியில் கலந்து கொண்ட வர்கள், வங்கத்தின் காவலர் என்று அழைக் கப்படும் சித்தரஞ்சன் தாஸ், கன்னட தேசியக் கவி ஞர் குவேம்பூர் ஆகியோரின் படங்கள் மட்டு மன்றி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள்  அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களை யும் ஏந்திச் சென்று தங்களின் இந்தித் திணிப்  புக்கு எதிரான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி யுள்ளனர். பங்களா பக்சாவின் பொதுச் செயலாளர் கர்க் சட்டோபாத்யாய் அளித்துள்ள பேட்டியில்,  “விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள், தங்களின் அடுத்த தலைமுறையினர் இந்திக்கு அடிமையாக வேண்டும் என்பதற்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை என்று ஆவே சத்துடன் கூறியுள்ளார். மேலும், இந்தித் திணிப்  புக்கு எதிராக அக்டோபர் 16-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.