பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டும் பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் வட மாநிலங்களில் ஆவேசமிக்க போராட்டம் நடைபெற்றது. (1)ஹரியானாவில் பிரிஜ் பூஷன் சிங்கின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. (2) தில்லி காவல்துறை தலைவர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மாதர் சங்க தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். (3) ஹரியானாவில் மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம்.
புதுதில்லி, ஏப்.28- மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல்ரீதி யாக கொடுமைகள் புரிந்துவரும் பாஜக நாடா ளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மே ளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்(66) உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் ஏப்ரல் 27 வெள்ளியன்று போராட்டம் நடைபெற்றது.
தில்லியில்...
தலைநகர் புதுதில்லியில் உள்ள நாடாளு மன்ற வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உட்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு வர்க்க - வெகுஜன அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, தில்லி மாநிலத் தலைவர்கள் ஆஷா ஷர்மா மற்றும் மைமூனா முல்லா முத லானவர்கள் முன்னின்று இந்த ஆர்ப்பாட்டத் தை நடத்தினார்கள். இவர்கள் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற வீதியிலிருந்து பேரணியாகச் சென்றார்கள். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். பேரணியில் சென்ற வர்கள் காவல்துறையினரால் இடையில் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப் பட்டார்கள். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நாடு முழுவதும்
இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தப் போராட்டங்களில் ஆயி ரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளார்கள். பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, மகா ராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாநகரங்களிலும், நக ரங்களிலும், கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மரியம் தாவ்லே சாடல்
“மல்யுத்த வீராங்கனைகள் (இவர்களில் ஒருவர் சிறுமி) தங்களுக்கு பாலியல் கொடு மைகள்இழைத்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக தில்லிக் காவல்துறையினரிடம் புகார்கள் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருப்பதையே சித்தரிக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேர்வழி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பின ராவார். இதனால்தான் பிரதமரும் அவருடைய அரசாங்கமும் இவர்மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்று கூறி வீதியிலேயே அமர்ந்து, உறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார்.
விளையாட்டு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
விளையாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள மோச மான தோல்விக்குப் பொறுப்பேற்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் அனுராக் தாகூர் உடனடியாக ராஜினாமா செய்திட வேண்டும். மல்யுத்த வீராங்கனை கள் அளித்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றம்புரிந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மரியம் தாவ்லே கூறியுள்ளார். போலீஸ்- கிரிமினல் கும்பல் கூட்டணி மேலும், “குற்றம்புரிந்த கயவர்கள் குறித்து புகார்கள் அளித்திட்ட மல்யுத்த வீராங்கனை களின் அடையாளங்களை தில்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலைய அதிகாரிகள், கிரி மினல் மஃபியா கூட்டத்தினரிடம் வெளிப் படுத்தியிருப்பதால், அந்தக் குண்டர் கும்பல், வீராங்கனைகளை அச்சுறுத்தி மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் குண்டர்கள்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசார ணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. “இந்தப் பிரச்சனையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாகத் தலையிட்டு, தில்லிக் காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட, பிரதமரை வலியுறுத்த வேண்டும், அதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். நாட்டின் மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு பெண்ணாகவும் இருப்பதன் காரணமாக, பெண்களுக்காகக் குறைந்தபட்சம் இதையாவது அவர் செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டி ருக்கும் வீராங்கனைகள் அனைவரையும் நாங்கள் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம். குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக, ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், வரவிருக்கும் காலங்களில் போராட்ட ங்கள் தீவிரமாகும்” என்றும் மாதர் சங்கப் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே கூறியுள்ளார். முன்னதாக வியாழனன்று காலை, தில்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வந்த ஸ்ரீமதி, மரியம் தவ்லே, மாதர் சங்க துணைத் தலைவர் கே.கே.சைலஜா, இணைச் செய லாளர் சி.எஸ்.சுஜாதா மற்றும் பலர் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் தலைமையில், மாணவர் சங்க தலைவர்களும், விளையாட்டு நட்சத்திரங்களின் போராட்டக் களத்திற்கு வந்தடைந்தனர். ஹரியானாவில் இருந்து விவசாய தலைவர்கள் மற்றும் மகா பஞ்சாயத்து பிரதிநிதிகளும் போராட்ட மையத்திற்கு வந்தனர்.
வழக்கு பதியாதது ஏன்? யெச்சூரி கேள்வி
பிரிஜ் பூஷனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும் தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி யுள்ளார். விளையாட்டுத் தாரகைகளை இவ் வாறு கையாள்வது ஏற்க முடியாதது. தேசத்தின் மதிப்பை வானளாவ உயர்த்தியவர்கள்தான் இப்போது போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சாடியுள்ள அவர், விளையாட்டு வீராங்கனைகளுக்கு கட்சியின் முழு ஆதரவையும் தெரிவித்தார். (ந.நி.)