புதுதில்லி, ஜன.29- “இந்திய அரசின் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையானது, நாட்டில் நில வும் பொருளாதார சமத்துவ மின்மையை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி யின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ் கூறியுள்ளார். இந்திய அரசின் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட், பிப்ரவரி 1 அன்று நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளு நர் டி.சுப்பாராவ் கூறியிருப்ப தாவது: “பொருளாதார வளா்ச்சி யை ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பட் ஜெட்டின் நோக்கம். அதேசம யம், இந்த முறை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் பொருளாதார சமத்துவமின்மையைக் களையும் வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
‘உலகின் மிகவும் சமத்துவ மற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது’ என, சமீ பத்திய ‘உலக சமத்துவ மின்மை’ அறிக்கை தெரி வித்துள்ளது. இத்தகைய பரந்துபட்ட சமத்துவமின்மை, தார்மீக ரீதியாக தவறா னது. அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த நிலை, நமது நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளையும் சிதைக்கும். எனவே, புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கு வதே, இந்த ஆண்டு பட்ஜெட் டின் கருப்பொருளாக இருக்க வேண்டும். இருக்கும். தீவிர வேலைவாய்ப்பு நமக்கு தேவைப்படுகிறது. கொரோனா பெருந் தொற்று காரணமாகக் குறைந்த அளவில் வருமானம் பெறுவோர், குறிப்பாக அமைப்புசாரா துறை யினர் வெகுவாகப் பாதிக்கப் பட்டனர். பொருளாதார வளர்ச்சி வேண்டுமெனில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நிர்வாக சீா்திருத் தங்கள் வழியாக வா்த்த கத்துக்கு உகந்த சூழலை ஏற் படுத்த வேண்டும். இவ்வாறு டி. சுப்பாராவ் கூறியுள்ளார்.