நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஞாயிறன்று முதல மைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி. தில்லி ராஜ் நிவாஸ் பவனில் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந் தித்து தனது ராஜினாமா கடிதத்தை அதிஷி வழங்கினார். ராஜினாமா கடி தத்தை கொடுக்கும் நிகழ்வுக்கு அதிஷி ராஜ் நிவாஸ் பவனுக்கு வந்த போது தனி யாக வந்ததாகவும், அவருடன் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் யாரும் வர வில்லை என செய்திகள் வெளியாகியுள் ளன.