states

ஆழமாக விசாரணை நடத்துக: சிபிஎம்

புதுதில்லி, ஆக.31- பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்திடும் தில்லுமுல்லுகள் குறித்து புதிய சாட்சியங்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் மீது ஓர் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இவற்றை மூடிமறைக்காதிருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

அதானி குழுமம் தங்களு டைய கம்பெனிகளின் மதிப்பையும், சொத்துக் களையும் பூதாகரப்படுத்திக்காட்டி பங்குச்சந்தை விலைகளில் தில்லு முல்லுகளைச் செய்திருப்பது தொடர்பாக புதிய சாட்சியங்கள் வெளிவந்திருக்கின்றன. வினோத் அதானியின் இரு நெருங்கிய சகாக்  கள் எப்படியெல்லாம் பெர்முடா வில் மூலதன நிதியத்தைப் பயன் படுத்தி, போலி கம்பெனிகளை (shell companies) அமைத்து, அதானி நிறுவனங்களில் மில்லி யன் டாலர்கள் பங்குகளை வாங்கி யிருக்கிறார்கள் என்று ஸ்தாபன ரீதியான குற்றம் மற்றும் ஊழல் வெளியீட்டுத் திட்டத்தில் (the Organised Crime and Corruption Reporting Project) இருந்து பெறப்பட்ட விவரங்களிலிருந்து,  தி ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும்  தி கார்டியன் ஏடுகள், இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தி ருக்கின்றன. தில்லுமுல்லு  

‘செபி’க்கு தெரியும்

 மேலும் அந்த அறிக்கையில் அதானி கம்பெனிகள் 2014இல் இவ்வாறு தில்லுமுல்லுகளில் ஈடு பட்ட விவகாரம் ‘செபி’ (‘SEBI’)க்கும் தெரியும் என்றும் ஆனாலும் அது பின்னர் இது தொடர்பான விசாரணைகளை முடித்துக்கொண்டுவிட்டது என்றும் கூறியிருக்கிறது. பிரதமர் மோடியுடன் அதானி  கொண்டிருக்கும் தொடர்புகள் கார ணமாக, பங்குச்சந்தையில் நடை பெறும் பரவலான மோசடிகள் மற்  றும் தில்லுமுல்லுகள் குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகள் எவ்  விதமான நடவடிக்கையும் எடுப்ப தில்லை என்பது இதுவரை உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது வெளிவந்திருக்கும் புதிய சாட்சியங்களின்படி அதானி  குழுமத்திற்கு எதிராக ஓர் ஆழ மான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும், அத்தகு விசார ணையை மூடிமறைக்காதி ருப்பதை உத்தரவாதப்படுத்து வதற்கு உச்சநீதிமன்றம் உரிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்.