states

img

மீண்டும் உலகின் 3-ஆவது பெரும்பணக்காரர் ஆனார் அதானி!

புதுதில்லி, நவ.2 - பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரருமான கவுதம் அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் மூன்றா வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.  கடந்த ஜூலை மாதத்தில், உலகப் பெரும்பணக்காரர் வரிசையில் அதானி நான்காவது இடத்தில் இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 137.4 பில்லியன் டாலர் (ரூ.  10.82 லட்சம்  கோடி) நிகர சொத்து மதிப்புடன் முதன்முறை யாக உலகின் மூன்றாவது பெரும்பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறினார்.  பின்னர் சற்று சறுக்கி நான்காவது இடத்திற்கே திரும்பிய அதானி, தனது நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு  தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அதிகரித்து, ‘வால்  ஸ்ட்ரீட்’ பங்குகளை விஞ்சியதால், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தொகுத்த ‘ரியல்-டைம் பில்லியனர்கள்’ பட்டியலில் தற்போது ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸை முந்தி  மீண்டும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு திங்கட்கிழமை மட்டும் 314 மில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்தது. அவ ரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 131.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

 கடந்த வியாழனன்று ஜெப் பெசோஸின் ‘அமேசான்’ நிறுவனம் பலவீனமான விடுமுறை விற்பனையை முன்ன றிவித்தது. இதனால் அமேசான்  பங்குகள் வீழ்ச்சிய டைந்து, அது, ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பிலும் பிரதி பலித்தது. இதனால் மூன்றாவது இடத்திலிருந்த ஜெப் பெசோஸ் அந்த இடத்தை தவறவிட்டார்.  அதேநேரம், அதானி குழும நிறுவனங்களின் பங்கு  மதிப்பு வெகுவாக உயர்ந்தது. இதனால் அவர் பெசோஸை  பின்னுக்குத் தள்ளி மீண்டும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதானியின் சொத்து மதிப்பு தற்போது 131.9  பில்லியன் டாலர்களாகவும், ஜெப் பெசோஸின் நிகர சொத்து  மதிப்பு 126.9 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. ‘லூயிஸ்  விட்டனின்’ பெர்னார்ட் அர்னால்ட், 156.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்  223.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பணக்காரராக நீடிக்கிறார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற புதிதில், 2015-ஆம் ஆண்டில், அதானியின் சொத்து மதிப்பு வெறும்  16 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும். ஆனால், 2022-ஆம் ஆண்டு அது சுமார் 132 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.