states

சிஆர்பிஎப் பணிக்கான தேர்வை தமிழில் எழுதலாம்

ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுதில்லி,ஏப்.15- சிஆர்பிஎப் பணிக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் தவிர இனி 13 மாநில  மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 15 சனிக்கிழமையன்று அறி வித்தது.   இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தி  மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக நாடு முழுவதும்  2024 ஜனவரி 1 ஆம்  தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.  சிஏபிஎப் எனப்படும் மத்திய ஆயுத  காவல் படை என்பது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல் லப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல்  (ஐடிபிபி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி), மத்திய தொழில் பாது காப்பு படை (சிஐஎஸ்எப்) மற்றும் அசாம் ரைஃபில்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. சிஏபிஎப் தேர்வுகள் மத்திய காவல் படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வு மையத்தால் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தப்பணிக்கான கணினி தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று முன்னர்  ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு   தமிழகத்தில்  கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சிகள்,இளைஞர்கள் அமைப்புகள் கண்டித்ததுடன், மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் , மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் தமிழில் தேர்வு நடத்தக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்  திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து சிஏபிஎப் பணிக்கான தேர்வை தமிழில் எழுத லாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய  ஆயுதப் படையில் உள்ளூர் இளைஞர்  களின் பங்களிப்பை அதிகப்படுத்துவ தற்கும், மாநில மொழிகளை ஊக்கு விப்பதற்காகவும் உள்துறை அமைச்சர்  அமித் ஷா இந்த முடிவை எடுத்துள்ளார். இனி மத்திய ஆயுதப் படை காவலர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் தவிர அசாமி, பெங்  காலி, குஜராத்தி, மராத்தி, மலையா ளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் அமைக்கப்படும். இந்த முடிவின் மூல மாக லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்  களின் தாய்மொழியில் தேர்வெழுது வதுடன் தங்களுக்கான தேர்வு வாய்ப்பு களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஒன்றிய உள் துறை அமைச்சகமும் பணியாளர்கள் தேர்வு வாரியமும் இணைந்து புதிய  புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட உள்ளது. இந்தப் புதிய வாய்ப்  பினை பயன்படுத்தி உள்ளூர் இளை ஞர்கள் மத்திய பணிகளில் சேர்வதற்  காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண் டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்  தப்படும்.

முதலமைச்சர் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் சமூக வலைதளப் பக்  கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதி யிருந்த கடிதத்தின் விளைவாக, மத்திய  ஆயுதக் காவல் படை (CAPF) காவலர்  தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளி லும் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு  அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவை மன தார வரவேற்கும் அதேவேளையில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் அனைத்  துத் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட  அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற நமது கோரிக்கையை மீண்  டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரி வித்துள்ளார்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத் தில் கூறியிருப்பதாவது: “சிஆர்பிஎப்  தேர்வுகளை தமிழில் எப்பொழுதும் நடத்தியதில்லை” என இரண்டு நாள்களுக்கு முன்னர் சொன்  னவர்கள், இன்று தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் அத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.மொழிச் சமத்து வத்துக்கும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிற் கும் கிடைத்த முக்கிய வெற்றி இது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.