states

காண்ட்ராக்டர்களிடம் கட்டுக்கட்டாக லஞ்சத்தை வாங்கிக் குவித்த கர்நாடக பாஜக எம்எல்ஏ!

தயாரித்து வருகிறது. இதன் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா ஆவார். அமைச்சர் பதவி யை எதிர்பார்த்து இருந்தவரை ‘ஆறுதல் படுத்தும்’ விதமாக பாஜக இவருக்கு ‘வளமான’ வாரியத் தலைவர் பதவியைத் தூக்கிக்  கொடுத்திருந்தது. இவரது மகன்தான் பிரசாந்த்  மதல். பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால்  வாரியத்தில் (BWSSB) தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில்தான் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட்டின் மூலப்பொருட் களுக்கான டெண்டர் வழங்க, எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா சார்பில் மகன் பிரசாந்த் மதல்  காண்ட்ராக்டர் ஒருவரிடம் ரூ. 40 லட்சம் லஞ்சம்  வாங்கி கையும் களவுமாக மாட்டினார். இது தொடர்பாக பிரசாந்த் மதலை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார், ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு,  அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்திய நிலையில், அலுவலகத்தில் ரூ. 1 கோடியே 70 லட்சம், வீட்டில் ரூ. 6 கோடி என ஒட்டுமொத்த மாக ரூ. 7 கோடியே 70 லட்சம் லஞ்சப் பணம் பிடிபட்டுள்ளது.

இந்த லஞ்ச ஊழல் விவகாரம், கர்நாடகத்தை யே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடை பெற்று வருகிறது. இதனிடையே பாஜக எம்எல்ஏ-வும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் வாரியத் தலைவருமான மதல் விருபாக்சப்பா, அவரது மகன் பிரசாந்த் மதல் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2000, 500 நோட்டுகள் அடங்கிய பணம் கட்டுக்கட்டாக கட்டில் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் வெளியாகி இணையதளவாசிகளையே மலைப்பில் ஆழ்த்தியுள்ளன. ரூ. 7 கோடியே 70 லட்சம் லஞ்சப் பணம்  குறித்து, பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா விடம் லோக் ஆயுக்தா விரைவில் விசாரணை நடத்தும் என்று கூறப்படும் நிலையில், கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் நிறு வனத்தின் தலைவர் பதவி, மதல் விருபாக் சப்பாவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மேலும் மதல் விருபாக்சப்பாவே, தனது வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஊழல் செய்து கையும், களவுமாக மாட்டிக் கொண்ட நிலையில், எல்லோரும் சொல்வதைப் போல மதல் விருபாக்சப்பாவும், தன்னை ஒரு  அப்பாவி என்று கூறிக்கொண்டுள்ளார். “எனக்கும் லோக் ஆயுக்தா சோதனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உள்நோக்க த்துடன் என்னையும், எனது குடும்பத்தையும் பழிவாங்கும் செயலாக இது உள்ளது” என்று தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைப்பதற்காக, வெள்ளியன்று கர்நாடகா வந்துள்ளார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ-வின் மகன் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட நிகழ்வு, அமித்ஷாவை பதற்றம் அடையச் செய்துள்ளது.