புதுதில்லி, ஏப். 10 - “நாங்கள் படித்து வாங்கிய பட்டத்தைக் காட்டுகிறோம்.. நீங்கள் உங்கள் பட்டத்தைக் காட்டுங்கள்” என்ற பிரச்சார இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரி பட்டச் சான்றிதழ் குறித்து, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி யிருந்தார். மத்திய தகவல் ஆணை யத் தலைவரும் (CIC), கெஜ்ரிவால் கோரிய விவரங்களைத் தருமாறு, குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், கடந்த மார்ச் 31 அன்று தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றம், பிரதமர் மோடியின் கல்வி விவரங் களைக் கோரியதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால், “பிரதமர் தனது கல்வி குறித்த சான்றிதழ்களை காட்டா ததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவரது ஆணவம். தன்னுடைய கல்விச் சான்றிதழை யாரிடமும் காண்பிக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் நினைக்கலாம். ஆனால், ஜன நாயகத்தில் இத்தகைய நடை முறைகளை ஏற்றுக்கொள்ள முடி யாது. இரண்டாவது காரணம், அந்த பட்டப் படிப்பு போலியானதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “நம் நாட்டின் பிரதமர் என்ன படித்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடவா நமக்கு உரிமையில்லை. நீதிமன்றத்தில் கல்விச் சான்றிதழ்களை காட்ட மறுப்பதை எதிர்க்கிறேன். சான்றி தழைக் கேட்டதற்காக எனக்கு அப ராதம் வேறு விதிக்கப்பட்டுள்ளது. இங்கே என்ன நடக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பின்னணியில்தான், “நாங்கள் எங்களின் பட்டச்சான்றி தழைக் காட்டுகிறோம்.. நீங்கள் உங்கள் பட்டச் சான்றிதழைக் காட்டுங் கள்” என்ற பிரச்சார இயக்கத்தைத் தில்லியில் துவங்கியுள்ளது. ஒருவார காலத்திற்கு நடை பெறும் இந்த பிரச்சார இயக்கத்தை தில்லி கல்வி அமைச்சர் அதிஷி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தலைவர்கள் தங்கள் பட்டத்தை (Degree Certificate) உங்களுக்கு தினமும்காட்டுவார்கள். நான் தில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், ஆக்ஸ்போர்டில் இரண்டு முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். இவை (பட்ட சான்றிதழ்) அனைத்தும் அசல். இதேபோல அனைத்து தலைவர் களும் தங்கள் பட்டங்களை காட்டு மாறு நான் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பாஜக தலைவர்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.