states

img

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசில் ஆரம்பித்தது கலகம்

சிவசேனா, தேசியவாத காங்கி ரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து கொல் லைப்புறமாக ஆட்சியை பிடித்தது பாஜக.  தற்போது உடைக்கப்பட்ட சிவ சேனா (ஷிண்டே), தேசியவாத காங்கி ரஸ் (அஜித்) கட்சிகளுடன் மகாராஷ்டி ராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், முஸ்லிம்க ளின் இடஒதுக்கீடு மூலம் பாஜக கூட்டணி அரசில் கலகம் உருவெடுத் துள்ளது. தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் துணைத் தலைவர் சலீம் சாரங்,”மகாராஷ்டிராவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், முஸ்லிம் சமூ கத்திற்கான இடஒதுக்கீட்டை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாதது அவமானகரமா னது. அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தெருவில் இறங்கி போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள் ளோம். மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. மத்தி யில் ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை” எனக் கூறினார்.  மக்களவை தேர்தலில் மகாராஷ் டிராவில் பாஜக கூட்டணி படுதோல்வி, மோடியின் 3ஆவது ஒன்றிய அமைச் சரவையில் சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கேபி னட் பதவி கொடுக்காதது உள்ளிட்ட சம்பவங்களால்  கூட்டணிக்குள் ஏற் கெனவே புகைச்சல் ஏற்பட்டுள்ளநிலை யில், தற்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தகட்ட மோதல் துவங்கியுள்ளது.