பாரீஸ், ஏப்.27- ஒற்றை ஆளாக படகில் பெருங்கடல்களைக் கடக்கும் கோல்டன் குளோப் இறுதிப் போட்டியில், இரண்டாவது இடத்தில் மலையாளியான அபிலாஷ் டாமி உள்ளார். போட்டியில் உள்ள ஒரே பெண்மணி, தென்னாப்பிரி க்காவின் கிர்ஸ்டன் நியூஸ்காஃபர். இவர் ‘மின்னிஹாஹா’ படகில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தற்போதைய மதிப்பீடுகளின்படி, கிர்ஸ்டன் 28 ஆம் தேதி முடிப்பார். 29ஆம் தேதி காலை அபிலாஷ் சென்றடைவார். இந்திய விளையாட்டு வரலாற்றில் கொச்சியின் கண்டநாடு வீரரின் சாதனை ஈடு இணையற்றதாக இருக்கும். போட்டியில் இன்னும் 233 நாட்கள் உள்ள நிலையில், 40 வயது கிர்ஸ்டன், அபிலாஷை விட ஏப்ரல் 26 புதனன்று 185 கி.மீ முன்னிலையில் இருந்தார். பயணத்தின் 226 நாட்களுக்குப் பிறகு, அபிலாஷ் ஒரு சிறிய முன்னிலை பெற்றார். இருப்பினும், அடுத்த நாளே, கிர்ஸ்டன் தனது முன்னிலைக்கு திரும்பினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 4 அன்று பிரெஞ்சு கடலோர நகரமான லி சேபிள் டிலோனி-லிருந்து தொடங்கிய பயணம் இந்த வாரம் அங்கு முடிவடையும். போட்டி தூரம் 3,00,000 மைல்கள் (சுமார் 48,000 கிமீ). இன்னும் கடக்க வேண்டிய தூரம் சுமார் 500 கி.மீ. அபிலாஷின் பயணம் ‘பயநாத்’ என்ற படகில். போட்டியின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்பட 16 பேர் இருந்தனர். இப்போது மூன்று பேர் உள்ளனர். ஆஸ்திரியா வின் மைக்கேல் குகன் பெர்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒரு பெண் கோல்டன் குளோப் விருதை வெல்வது இதுவே முதல் முறை. அதேபோல் இந்தியர் ஒருவர் இந்த சாகசத்தில் வெற்றி பெறுவதும் முதல் நிகழ்வாகும்.