புதுதில்லி, ஜன. 30 - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்த லுக்கு, இரட்டை இலைச் சின்னம் கோரி, தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்த ரவு, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பர பரப்பைக் கூட்டியுள்ளது. அதிமுக-வின் ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக் கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். ஓ. பன்னீர்செல்வம் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகரிக்கும் வகையில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செய லாளர் என்ற அடிப்படையில் தாம் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. ஆகையால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் தாம் என்பதை ஏற்று, இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய உரிய உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு திங்களன்று விசாரித்தது. இந்த விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜரானார். அப்போது, இது ஒரு தனித்துவமான வழக்கு என்ற நீதிபதிகள், இப்போது தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது மட்டுமே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மூல வழக்கான அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் இப்போது இடையீட்டு மனு மீதான உத்தரவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இடையீட்டு மனு தொடர்பான விவ காரத்தை மட்டுமே விசாரித்து உத்தர விடுவோம் என விளக்கமாகவும் திட்டவட்ட மாகவும் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தை எதிர்தரப்பாக சேர்க்க வேண்டும் என்று பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணை யத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தர விட்டனர். இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு பிப்ரவரி 7 கடைசிநாள் என்ப தால் அதற்குள் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி விடுத்திருந்த மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “தயவு செய்து பதி லளிக்க கால தாமதம் செய்யாதீர்கள்” என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்ட னர். இவ்வழக்கில் ஓ. பன்னீர்செல்வமும் 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கும் நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.