நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்திய அரசின் பொதுக்கடன் ரூ. 147 லட்சத்து 19 ஆயிரம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான கணக்கு மட்டுமே ஆகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான கடன்கள் சேர்க்கப் படவில்லை. அதனையும் சேர்த்தால், இந்தக் கடன்தொகை மேலும் அதிகரிக்கும். பொதுக் கடன்கள் (Public Debt) என்பவை, இந்திய அரசு பொது ஆதாரங் களில் இருந்து பெறும் கடன்கள் ஆகும். குறிப்பாக, அரசு பத்திரங்கள் வாயிலாக பெறும் கடன்களே பொதுக்கடன்களில் பெரும்பகுதி ஆகும். இதுபோக, அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய பென்சன் கட்டணங்கள் உள்ளிட்ட வையும் இந்த பொதுக் கடன்களில் அடங்கும். அதன்படி பொதுக் கடன்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை யன்று வெளியிட்டுள்ளது. இதில்தான், இந்திய அரசின் பொதுக் கடன் ரூ. 147 லட்சத்து 19 ஆயிரம் கோடி யாக அதிகரித்திருப்பது தெரியவந்துள் ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் இந்த கடன்தொகை ரூ. 145 லட்சத்து 72 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், 3 மாதங்களுக்குள் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி கடன் அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டைக் காட்டிலும் செப்டம்பர் காலாண்டில் இந்திய அரசின் பொதுக் கடன்கள் 1 சதவிகிதம் உயர்ந்துள் ளது. செப்டம்பர் மாத இறுதி வரை, இந்திய அரசின் மொத்த கடன்களில் பொதுக் கடன்கள் 89.1 சதவிகிதமாக அதி கரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 88.3 சதவிகிதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் மொத்த நிதிப் பற்றாக்குறை இலக்கு 16 லட்சத்து 61 ஆயிரத்து 196 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கு (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) உள்ளே யே மொத்த நிதிப் பற்றாக்குறை இலக்கில் 37.3 சதவிகிதம் எட்டப்பட்டு விட்டது. இதேபோல அரசின் செலவுகளுக்கான இலக்கிலும் அரையாண்டிற்கு உள்ளே யே 45.7 சதவிகிதம் தொடப்பட்டு விட்டது. மொத்தம் 14 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன செலவுகளை அரசு செய்துள்ளது. இதில் 30 சதவிகிதத்தை - அதாவது, 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை வட்டி செலுத்துவதற்கு பயன் படுத்தியுள்ளது. செப்டம்பர் காலாண்டில் மட்டும் அரசு பத்திரங்கள் வாயிலாக 4 லட்ச த்து 06 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோடி அரசு கடன் வாங்கியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் கடன் ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடி யாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சி க்கு வந்த பின், கடந்த 8 ஆண்டுகளில், இந்த கடனானது சுமார் 3 மடங்கு அதி கரித்துவிட்டது. அதாவது, நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டு களில் இந்தியா பெற்ற கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஆட்சிக்கு வந்த இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் புதிதாக 92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்து, ரூ. 147 லட்சத்து 19 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.