states

துர்காதேவி சிலைகளை கரைக்கச் சென்ற 8 பேர் பலி

கொல்கத்தா : மேற்குவங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு பத்து  நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினத்தன்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்குகொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால்  ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், துர்கா சிலைகளைக் கரைக்கச்சென்றவர்களில் எட்டுப்பேர் பலியாயினர். பலியானவர்களில் இருவர்  13 வயது நிரம்பியவர்கள். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வரும் நிலை யில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

;