பாலக்காடு, ஏப்.5- அட்டப்பாடியில் பழங்குடி யின இளைஞர் மது,கும்பல் தாக்கு தலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நிரூ பிக்கப்பட்ட 13 பேருக்கும் 7 ஆண்டு கள் கடுங்காவல் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு 3 மாதம் சிறை தண் டனை விதித்து மன்னார்க்காடு எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதி பதி கே.எம்.ரதீஷ்குமார் தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான ஹுசைனுக்கும் ஒரு லட்சத்து ஐந் தாயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. ஏனைய பிரதி வாதிகளுக்கு ஒரு லட்சத்து பத் தாயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது. பதினாறாவது குற்ற வாளி முனீருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது, ஆனால் அவர் ஏற்க னவே சிறைவாசம் அனுபவித்து விட்டதால், 500 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட லாம். ஏற்கனவே இரண்டு பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர். பிறழ் சாட்சிகள் மீது நட வடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் போது 24 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
முதல் குற்றவாளி உசேன் (54), மற்ற குற்றவாளிகள் மரய்க்கார் (37), ஷம்சுதீன் (37), ராதா கிருஷ்ணன் (38), அபுபக்கர் (35), சித்திக் (42), உபைத் (29), நஜீப் (37), ஜெய்ஜு மோன் (48), சஜீவ் (34), சதீஷ் (43), ஹரீஷ் (38), பிஜு (41) முனீர் (32) ஆகியோர் குற்ற வாளிகள் என செவ்வாயன்று (ஏப்.4) அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை புதனன்று அறிவித்தது. அனிஷ் (34) அப்துல் கரீம் (52) ஆகி யோர் குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கி செவ்வாயன்றே விடு விக்கப்பட்டனர். மது கொலை வழக்கு கேரளா வில் நடந்த கும்பல் தாக்குதல் களின் கடைசி வழக்காக இருக் கட்டும் என்று நீதிமன்றம் கூறி யது. தன்னிச்சையான ஆணவக் கொலையைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் சாதி யினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மதுவைக் கொல்லும் எண்ணம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. அட்டப்பாடி சிந்தேகி ஊரைச் சேர்ந்த மல்லன் - மல்லி தம்பதிய ரின் மகன் மதுவை 2018 பிப்ரவரி 22, அன்று, திருடன் என்ற சந்தே கத்தின் பேரில் காட்டில் இருந்து முகலிக்கு கொண்டு வந்து போலீ சில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மது காட்டில் இருந்து பிடிபட்ட காட்சி களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். போலீசார் மது வை அகலியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத் துச் சென்றபோது, மது இறந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கி யதில் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்தார் என்பது வழக்கு. மது கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு மன் னார்க்காடு எஸ்சி மற்றும் எஸ்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.