கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
கோவா திருவிழாவில் சோகம்
பாஜக ஆளும் கோவா மாநி லம் ஸ்ரீகாவோவில் லைராய் தேவி கோவில் அமைந்துள் ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண் டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. 50,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் திரண்டனர். இந்நிலையில், திருவிழாவின் இரண்டாவது நாளான சனிக்கிழமை அன்று அதிகாலை கோவிலின் சரிவான பாதையில் பக்தர்கள் இறங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். காய மடைந்தவர்கள் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.