states

புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்படும் வரை 47 பேர் கொண்ட குழு காங்கிரஸை வழிநடத்தும்!

புதுதில்லி, அக்.27- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  24 பேர் கொண்ட செயற்குழுவே வழிநடத்தும். மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசின் புதிய தலைவராக பதவி யேற்றுக் கொண்ட நிலையில், முந் தைய செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது செயற் குழு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், புதிய செயற்குழு உறுப்பினர்கள் (CWC) தேர்ந்தெ டுக்கப்படும் வரை கட்சியை வழி நடத்திச் செல்வதற்கு, இடைக்கால ஏற்பாடாக 47 பேர் கொண்ட குழு வை மல்லிகார்ஜூன கார்கே அமைத் துள்ளார். இந்தக் குழுவில் முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரி யங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா  சோனி, ஜெயராம் ரமேஷ், தினேஷ் குண்டுராவ், கே.எச். முனியப்பா, முகுல் வாஸ்னிக், அபிஷேக் மனு சிங்வி, திக்விஜய் சிங், ரன்தீப் சுர்ஜே வாலா, அஜய் மக்கன், ஹரிஷ் ராவத், கட்சித் தலைமைக்கு எதிராக முன்பு  குரல்கொடுத்த ‘ஜி-23’ தலைவர் களில் ஒருவரான ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் இடம்பெறவில்லை. இந்த  வழிகாட்டும் குழுவில் தமிழகத்திலி ருந்து, ப. சிதம்பரம், டாக்டர் ஏ. செல்ல குமார், மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் 24 பேரில் 12 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். மீதமுள்ள 12 பேரை காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தனது அதிகாரத்தின் மூலம் நியமிக்கலாம் என்பது குறிப்பி டத்தக்கது.