புதுதில்லி, டிச. 3 - ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலக்கட்டத்தில் பயணிகள் ரயில் மூலம் இந்திய ரயில்வே ரூ. 43 ஆயிரத்து 324 கோடி அளவிற்கு வரு வாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வரு வாயைக் காட்டிலும் 76 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ரூ. 24 ஆயிரத்து 631 கோடியை வருவாயாக ஈட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல நடப்பு நிதியாண்டில் இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் 50 சதவிதம் அதிகரித்துள் ளது. கடந்த 2021-ஆம் ஆண்டின் 8 மாத காலத்தில் ரூ. 22 ஆயிரத்து 904 கோடி வருவாய் ஈட்டப்பட்டி ருந்த நிலையில், தற்போது அது ரூ. 34 ஆயிரத்து 303 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை முன்பதிவு செய்யப்படாத பயணிகள் மூலமாக கிடைத்த வருவாய், ரூ. 9 ஆயிரத்து 021 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ரூ. ஆயிரத்து 728 கோடி அளவிற்கே வருவாய் கிடைத்திருந்த நிலையில், தற்போது அது 422 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிக ளின் எண்ணிக்கை 10 சதவிகிதம் (48 கோடியே 60 லட்சம் பேர்களிலிருந்து 53 கோடியே 65 லட்சம் பேர்களாக) அதிகரித்துள்ளது. இதேபோல முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் முன்பதிவு செய்யாமல் பயணித்த வர்களின் எண்ணிக்கை 155 சதவிகிதம் அதிகரித் துள்ளது. கடந்த ஆண்டு 138 கோடியே 13 லட்சம் பேர் பயணித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 352 கோடியே 73 லட்சமாக அதி கரித்துள்ளது. சரக்கு ரயில்கள் மூலமான வருவாயைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் 91 ஆயிரத்து 127 கோடி ரூபாயாக இருந்தது, நடப்பாண்டில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 905 கோடியாக அதி கரித்துள்ளது. இது 16 சதவிகித வருவாய் அதி கரிப்பாகும். சரக்கு கையாளுதலும் 903.16 மெட்ரிக் டன்னிலிருந்து 978.72 மெட்ரிக் டன்னாக 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022 நவம்பரில் மட்டும் ரயில்வே-க்கு ரூ. 13 ஆயிரத்து 560 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.